Wednesday, December 23, 2009

முரண்



அரங்கன் சன்னிதி,
அமெரிக்க குடுமி பக்தர்,
பையில் துளசி மாலையுடன்,
லேப்டாப்!

Friday, December 4, 2009

தமிழ் வாழ்த்து!


முத்தாகி வித்தாகி தித்திக்கும் தேனாகி எத்திக்கும் நிலையான தமிழே!

கொத்தாகி கொடியாகி கொடி மீது மலராகி பக்திக்கு பாட்டான தமிழே!

உன் ஆதிக்கம் சாதிக்கும், ஆனாலும் நா திக்கும் நீ வந்து விளையாடு தமிழே!

நீதிக்கும் போதிக்கும் நிஜமான வாழ்க்கைக்கும் நீ வந்து அருளாடு தமிழே!

என் பா திக்கக்கூடது தமிழே!

Sunday, November 29, 2009

Tagged again!

I realized I have been serious in my blog recently. But all I could think was serious stuff :) But then I never could think of something light to write.. SAD!! seriously... So I resigned to a tag thing! Here it goes...

I am: a bit confused.
I think: I am losing my mind here!
I know: that I am God’s biggest mistake!
I want: to go home right now!
I have: been thinking something… Hmmm…
I wish: for more wishes!
I hate: a few people in my life, but can’t really help it! :D
I miss: being in love!
I fear: slimy insects!
I feel: the urge to scream out loud…
I hear: deafening silence!
I smell: (right now) coffee!
I crave: for thayir sadam, manga urugai, chicken briyani, thalcha, home made ayira meen kozhambu! nothing better!
I search: for the one who shall remain forever.
I wonder: if I can finish my work in time today…
I regret: not being able to hold on to her!
I love: the smell of rain in summer.
I ache: when I twist my body in an awkward angle!
I care: not one bit for the political jerks in the world! :D
I am not: a religious guy!
I believe: I can fly!
I dance: when I am high! :D (which is never)
I sing: in the bathroom and while riding the bike!
I cry: not…
I don’t always: tell the truth!
I fight: with myself a lot!
I write: to please the Reader! (remember, I'm one too! :) )
I win: always!
I lose: never!
I never: lose! :P
I always: try not to repeat myself!
I listen: very well…seriously!
I can usually be found: online!
I am scared: of my own shadow! It’s a very powerful piece of dark magic!
I need: to be constantly reminded of my own mortality!
I am happy about: what I am!

Sunday, November 22, 2009

அறிவியல் குற்றம்



விலக விலக புள்ளிதானே?
நீ மட்டும் எப்படி? விஸ்தாரமாய்?

Sunday, November 1, 2009

ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது வெகு சுலபம்

ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.


சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.



பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ,
ஒரு ஆன்மாவையோ,
ஒரு அன்பையோ,
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்..

- நன்றி - யுவன்

Monday, October 26, 2009

இயற்கை நங்கை....




முதுவேனில் வந்த பேதை.. இளவேனில் மங்கை ஆனாள்..
குளிர் காற்றின் தொடுகையிலே இலை மேனி சிவந்து போனாள்..
ஆசையின் உச்சத்தில் ஆடைகளை துறந்து நின்றாள்..
நாணத்தின் எச்சத்தில், பனிப்போர்வை போர்த்திக்கொண்டாள்..

Thursday, October 15, 2009

ஒரு மழை நாளில்..

எல்லா தினங்களும் ஒரே மாதிரி விடிவதில்லை. சில தினங்கள் இருளை விட்டு மெதுவாகசோம்பல் முறிக்கும் போதே ஆசிர்வதிக்கபடுகிறது. அதனிடம் நமக்குக்கொடுக்க நிறையஇருக்கிறது. எடுத்துக்கொள்வதும் கொள்ளாததும் நம் இஷ்டம். சில தினங்கள் எதோ ஊடலில்இருக்கும் காதலி, ஒற்றை சொல்லிலேயே பதில் சொல்வது போல நம்மிடம் அளவாகபேசிச்செல்லும். சில தினங்கள் நம்மை அவமானத்தால் குளிப்பாட்டுகின்றன. சில தினங்கள்கோபத்தை உமிழ்கின்றன. காரணங்கள் அதற்குத் தேவை இல்லை. காரணமே இல்லாமல் யாரோநம்மை திட்டுவது போலவும், நாம் அதை மெளனமாக ஆமோதிப்பதைப்போலவும் இருக்கும். சில தினங்கள் பயத்தையும், சில தினங்கள் கோபத்தையும் ,சில தினங்கள் விரக்தியையும், சில தினங்கள் வெறும் வெறுமையையும் தந்து செல்கின்றன... மிக அபூர்வமாக சில தினங்கள் நம்மிடம்நம்மைத் தந்து செல்கின்றன. அவை எப்போதும் மழை வந்து ஓய்ந்த தினங்களாகவே இருக்கின்றன.

அவை நம்மோடு பேசும். நம்மோடு அழும். நமக்கு ஆறுதல் சொல்லும். நம்மிடம் மன்னிப்புகேட்கும். செல்லமாக கோபித்துக்கொள்ளும்.. நமக்குத் தாலாட்டு பாடும். "என்ன நீ? இன்னும்வெளியில் வரவில்லையா? வா! உலகம் எவ்வளவு அழகு? பார்!" என்று அன்பாகக்குட்டும். மழைநாட்கள் மரத்தோடு, மனத்திற்கும் கொஞ்சம் ஈரம் சேர்த்துச் செல்கின்றன...

-----------

சின்ன வயது மழை நாட்கள் எனக்கு காதிதக்கப்பல்களையும், மொட்டை மாடி மழை குளியல்களையும், அதன் பிறகு வரும் காய்ச்சலையும், பள்ளி விடுமுறைகளையும் ஞாபகப்படுத்துகின்றன..

நான் 8 வது படித்துக்கொண்டிருந்தேன்.மதுரையில் அப்போது வெள்ளம்.. வைகை வெகு நாட்கள் கழித்து பொங்கினாள். பள்ளியில் காலாண்டு பரீட்சை நடந்து கொண்டு இருந்தது. பேருந்து வரவில்லை. எனது நண்பர்களையும் என்னையும் காரில் போட்டு எனது அப்பா மதுரை வெள்ளத்தின் ஊடே பள்ளிக்கு அழைத்து சென்றபோது அன்று பரீட்சை ரத்து செய்யப்பட்டுள்ள செய்தி தெரிந்தது...

அப்போது வெள்ளத்தில் வீடிழந்தவர்களைப் பற்றி யோசிக்க வில்லை, உயிரிழந்தவர்களை பற்றி யோசிக்க வில்லை, உடமையிழந்தவர்களைப் பற்றி யோசிக்கவில்லை... யோசிக்கத்தெரியவில்லை.. கணக்கு பரீட்சை அன்று இல்லை.. அவ்வளவுதான் தெரிந்தது..

மழையின் வீரியத்தை உணராத வயது அது... விடுமறையாக மட்டுமே தெரிந்த மழை நாள் அது..

----------------

நான் டி.வி.எஸ். பள்ளியில் படித்தபோது அதிகாலை ஆறு மணிக்கு பள்ளிப்பேருந்து எனது வீட்டு வாசலில் நிற்கும். தூக்கம் கலையும் முன் ஷூ சாக்ஸ் பவுடர் எல்லாம் போட்டு ஏன் அப்பாவுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருப்பேன். முதுகில் சற்றே கனத்த பை, கையில் சுட சுட இட்லியோ தோசையோ நூடில்சோ. தூரத்தில் பேருந்து வருவது அதன் முன் விளக்கின் உபயத்தில் தெரியும். நான் தினமும் பயணித்த பேருந்தின் எண் 2 . பேருந்து, நிறுத்தத்தில் நின்றவுடன் முதலில் யார் ஏறுவது என்ற போட்டி இருக்கும்.எப்போதும் தொற்றுப்போவேன்.. :)

நான் ஏறியவுடன் விறு விறுவென்று ஒட்டுனருக்குப்பின்னல் இருக்கும் இருக்கை வரிசையில் 5 வது இருக்கையில் அமர்ந்து சடாரென ஜன்னல் திறந்து வீட்டு வாசலில் நிற்கும் என் அம்மாவிடம் 'டாட்டா' காட்டுவேன்... அந்த 5 வது இருக்கை எனக்கென்றே ஒதுக்கப்பட்டது. பேருந்தின் கண்டக்டர் அக்காவிடம் பட்டா எழுதி வாங்காத குறை.


அன்று மழை பெய்து ஓய்ந்திருந்தது.. மழை நாளின் குளிரில் ஜன்னல்கள் சிக்கிக்கொண்டன.. ஜன்னலை திறக்க முடியவில்லை.. அம்மா வாசலிலிருந்து ஜன்னலையே பார்ப்பது தெரிந்தது. திறக்க முயன்றுகொண்டே இருந்தேன். ம்ஹூம்.. பேருந்து கிளம்பிவிட்டது. அம்மா அந்த ஜன்னலுக்கு டாட்டா காண்பித்தாள். நானும் உள்ளே இருந்து டாட்டா காண்பித்தேன்... ஜன்னலின் ஓரத்தில் தேங்கி இருந்த மழை நீர் ""Sorry brother... " என்று சொல்லிக்கொண்டே ஜன்னலில் வழிந்தது....

மழையிடம் செல்லமாக கோபித்துக்கொண்ட நாள் அது .. :)
----------------
எல்லோருக்கும் ஒரு 'மல்லிகா டீச்சர்' இருக்கத்தான் செய்கிறார். எனது மல்லிகா டீச்சரின் பெயர் "மேரி". எனக்கு A,B,C,D சொல்லிக்கொடுத்தவர். அவரது முகத்தையும், கொண்டையையும், பூ போட்ட குடையையும் தவிர வேறு எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை. (எல்லா டீச்சர்களும் ஏன் பூ போட்ட குடை வைத்திருக்கிறார்கள்? வெயிலோ, மழையோ, ஏன் அதை பிடித்துக்கொண்டே நடக்கின்றார்கள்?).

அவரை 14 ஆண்டுகள் கழித்து ஒரு மழை நாளின் மாலைப்பொழுதில் அவர் வீட்டில் சந்தித்தேன் :)

"டேய் லட்டூ.. எப்டி இருக்க? எவ்ளோ வளந்துட்டடா? எங்க படிக்கற? நல்லா படிக்கறியா? அம்மா அப்பா எல்லாம் எப்டி இருக்காங்க? எங்க இருக்கீங்க? உனக்கு டான்சில்ஸ் இருந்துதே? சரியா போயிடுச்சா?ஸ்கூல் நல்லா இருக்கா? ஏன்டா கண்ணா கேத்தி ஸ்கூல விட்டு போன?" - அவரிடம், கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருந்தது! என்னிடம் ஒன்றே ஒன்றுதான் "என்னை எப்டி ஞாபகம் வேசுருக்கிங்க?" என்று கேட்கத்தோன்றியது. ஆனால் கேட்கவில்லை..

நான் பார்த்து கொஞ்சம் வயதான மேரி மிஸ்ஸை.. அனால் அவர் UKG பாரதியைத்தான் பார்க்கிறார் என்று விழங்கியது.. எத்தனை பேருக்கு தங்கள் 17 வது வயதில் அம்மாவைத்தவிர இன்னொருவரால் "லட்டூ" என்று அழைக்கப்படும் பாக்கியம் இருந்திருக்கிறது? "நீ கொடுத்துவைத்தவனடா" என்றது அந்த மழை நாள்..

வீடு திரும்புகையில் இடிகள், "A for Apple" என்றது...
--------------

என் தோழியின் தோழி ஒருத்தி எனக்காக ஒரு மழை மாலையில் பாடிய பாடல், மழை பற்றியது.. இப்போதும் எனது அலைபேசியில் பதிவாக இருக்கிறது.. அது பாரதியின் "கற்றே வா!" என்ற வசன கவிதை.. பாடியவள் - அனு. எனது தோழி - சிந்துஜா. இருவருக்கும் நன்றி... அவ்வளவு இனிமை அந்த பாடல்..

"மழைக்காலம்.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
மலைக்காற்று நல்லது.
கடற்காற்று மருந்து.
வான் காற்று நன்று.
காற்று தேவனை வணங்குவோம்
காற்றே வா, காற்றே வா
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு
மனதை மயக்குகின்ற இனிய வாசனையுடன் வா
காற்றே வா காற்றே வா!..

மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு,
மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா!
இலைகளின் மீதும்,
நீரலைகளின் மீதும் உராய்ந்து,
மிகுந்த ப்ராண - ரசத்தை எங்களுக்குக் கொண்டு வா! காற்றே வா!"

இன்னும், அனு பாடல் பயின்று கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறேன்.. வேண்டும் என்று விரும்பிகிறேன்..மழை வரும்போதெல்லாம் மனதில் அந்தப்பாடல் வரும்... பாடலை கேட்கும்போதெல்லாம் புலன்களில் மழை வரும்..

இப்போது இருவரும் என்னிடம் முன்புபோல் பேசுவதில்லை.. காரணம் - நான்!! உறவுகளின் முக்கியத்தை உணர்த்திய மழை அது..


--------------

ஒரு குளிர் நிரம்பிய மழை இரவில் கல்லூரி விடுதியில் படுத்திருந்த சக மாணவனுக்கு வலிப்பு வந்தது. அதன்பிறகு வலிப்பு வரும் காட்சியை பார்த்தாலே அந்த நண்பனும் பின் குளிர் நிரம்பிய இரவும் ஞாபகம் வரும்.

-------------
ஒரு இருள் படர்ந்த மழை நாளில் என் கல்லூரியின் அருகில் இருக்கும் குன்றின் மீது ஏறி, அமர்ந்து என் ஊரை கொஞ்சம் உயரத்தில் இருந்து பார்த்தேன்.. உலகம்தான் எவ்வளவு பெரிது? மிகச்சிறியவனாக உணர்ந்தேன்.. மேகம் கசிந்த நீர்த்துளியில் ஞானம் பெற்ற நாள் அது..
-------------

ஒரு மழை இரவில்தான் வெளித்திண்ணையில் இருந்த நாய்க்குட்டி குளிரில் விரைத்து செத்துப் போயிருந்தது.

-------------

ஒரு மழை நாளில்தான் எனது பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவுகள் வந்தது.. என்னால் மறக்க முடியாதை சந்தோஷ தினம் அது..

-------------

ஒரு மழை நாளின் மாலையில்தான் எனது நண்பன் இறந்து போனான்..

-------------

ஒரு மழை நாளின் இரவில்தான் எனது உயிர் தோழியிடம் தோல்வியின் அழுத்தத்தில் கதறி அழுதேன்.. எனக்காக கண்ணீர் சிந்த இன்னும் இரு விழிகள் இருப்பதை புரிந்தேன்...

-------------

இன்னும் எத்தனை எத்தனை மழை நாட்கள்? மழையின் ஈரப்பசையோடு நம் நினைவுகளில் ஒட்டிக்கொள்கின்றன, அதன் நிகழ்வுகள்..வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சிகளையும், அதனினும் மிகுந்த துயரங்களையும் இந்த மழை நாட்கள் தந்திருந்தாலும் அத்தனை கொடுமையாக இருக்கவில்லை.... மழையை பிடிக்காதவர் யார்? மழைக்குப் பிடிக்காதவர் யார்?

Sunday, August 16, 2009

ஹாப்பி பெர்த் டே!

வருடாவருடம்
வந்து போகும் என் நாள்
வழக்கத்திற்கு மாறாய்
பிரம்மிப்பின் வாசலில்
இழுத்து நிறுத்தியிருக்கிறது
என்னை!

நேற்றைய நள்ளிரவில்..

இதுவரை நானறிந்திராத
திசைகளினின்று நீண்டு...

கதகதப்பாய்
என் விரல் கோர்த்த கரங்கள்...

கைகுலுக்கிய தோழமைகள்...

இதம் நிறைத்த
தலைகோதல்கள் எல்லாம்..

என் இருப்பை முழுதாய்
அர்த்தப்படுத்திப் போயிருக்கின்றன!

துக்கத்தில் தூக்கம் தொலைத்த
இரவுகள் உண்டு...
மிதமிஞ்சிய மகிழ்வும்
உறங்க விடாதென்ற உண்மை
விளங்குகிறது இப்போது..

வாழ்த்துச் சுமந்து வந்த
வார்த்தைகள் எல்லாம்
பூக்களாய் மலர்ந்து
மணம் பரப்புகின்றன மனதிற்குள்...

திக்கெங்கிலும்
நிரம்பி வழியும் அன்பினை
சேர்த்தெடுக்கத் தவிக்கிறேன்...

இதயம் மலர்ந்து...
கண்கள் பனிக்க...

'என்றும் என்னோடிருங்களெ'ன
வேண்டுவதைத் தவிர்த்து
வேறொன்றும்
சொல்லத் தோன்றவில்லை
இப்போது!




------->>>>>> http://www.youtube.com/watch?v=yyUItb3tRrk <<<<<<<<------------

வியப்பாயிருக்கிறது! சில மாதங்கள் முன்பு வரை நானும் தனிமையும் மட்டுமாய் நிரப்பியிருந்த என் நாட்கள் இப்போது எல்லைகள் கடந்த தொடர்புகளோடு கண்முன் விஸ்வரூபமாய் விரிகின்றன. இத்தனை வருடங்களில் எந்தப் பிறந்தநாளும் இப்படி வாழ்த்துக்களால் நிரம்பி வழிந்ததாய் நினைவிலில்லை!
இவ்வளவு அன்பும் எனக்கே எனக்கா என்ற திகைப்பு மேலிட பூரிப்பில் திளைத்திருக்கிறேன்.

இரவு 8 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் வாழ்த்திக்கொண்டேயிருந்த அப்புஹய் மிகச்சரியாய் இரவு 12 மணிக்கு... வழக்கம் போல தூங்கிப்போனாள்!!

நள்ளிரவில் வாழ்த்து சொன்ன வினோ! வாய்ஸ் மெயில்லில் 'ஹாப்பி பெர்த் டே!" பாடிய பூக்கா :)

நடுநிசியில் குறுந்தகவல் அனுப்பி விடியும் வரை யாராயிருக்குமென யோசிக்க வைத்து அதிகாலையில் உற்சாகம் மிகுத்து பாசமாய் வாழ்த்தினாள் ஜி3.
சொந்த ஊருக்கு போயிருக்கும் ஜி நியாபகமாய் வாழ்த்தியது வியப்பு!

மாமா அதை சித்தி சித்தப்பா தங்கைகள் தம்பிகள் இந்திய நண்பர்கள்... ஐ.எஸ்.டி. போட்டு வாழ்த்து சொன்னார்கள்.

அப்பாவின் கவிதையும் அம்மாவின் கடிதமும் இதம் சேர்த்தது! நான் அதிக நாட்கள் இங்கு (சிகாகோ) இருக்க முடியாமல் தடுப்பது இவைகள் தாம் :)

அனைத்திற்கும் மேலாக எனது நண்பர்கள் என்னுடைய பிறந்தநாளை கடற்கரையில் கொண்டாடியது. சில சமயம் சந்தோசத்திலும் மனம் கணமாகும். அது அத்தகைய தருணம். உணர்ச்சிகள் குவியலாய் வந்தாலும் அதை வெளிக்காடக்கூட நேரம் இல்லாமல் எனது நண்பர்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.அவ்வளவு அழகாய் இருந்தது அந்த மாலை... முதன்முதலாய் சிகாகோவும் அன்று எனக்க்குப்பிடிதிருந்தது!

அனைத்திற்கும், அனைவருக்கும் இங்கு என் அன்பைச் சொல்லிக் கொள்கிறேன். நன்றியிலும் நெகிழ்விலும் நிறைந்திருக்கிறேன்.. இன்று மீண்டும் புதிதாய்ப் பிறந்திருக்கிறேன்!!

பி.கு. : இவ்வளவு நாள் ஏன் நான் அன்பினால் நன்றி செய்யவில்லை என்று தெரியவில்லை. அனால் இனியும் செய்யவில்லை என்றல் என்னால் தூங்கக்கூட முடியுமா? தூக்கம் இழந்த இரவுகள் போதும்.. இனி சந்தோஷ நிம்மதியில் தூங்குவேன்... மீண்டும் - "என்றும் என்னோடிருங்கள்!!" என்று வேண்டுவதைத்தவிர வேறு என்ன செய்ய?? தெரியவில்லை....