Saturday, September 7, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 21

எல்லா அம்மாக்களுக்கும் 
எட்டிவிடுகிறது நிலவு,
தன் குழந்தைக்கு உணவூட்ட..

நேற்று உண்ட நிலவை 
இட்லியென்றொ, 
தச்சி மம்மு என்றோ, 
லாக்டோஜன் என்றோ,


உணரும் தருணம் 
தொலைந்து விடுகிறது - நிலவோடு சேர்ந்து 
குழந்தையும்..

அம்மாக்களுக்கு மட்டும்,
எப்போதும் நிலவு,
எட்டிவிடும் தூரத்தில்..

Wednesday, September 4, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 20


சுடும் வெயிலை
சகித்துக்கொள்ளலாம் 

கொட்டும் மழையில் 
நனைந்தும் விடலாம்..

இந்த பாழாய்ப்போன 
தூரலைத்தான் 
என்ன செய்ய? தெரியவில்லை..

Tuesday, September 3, 2013

ஒரு வரி விமர்சனம்: தங்க மீன்கள்







தங்க மீன்கள் - வெறும் கவரிங்!
தன் இயலாமையை உணராமல் வெற்றி பெறும் சமூகத்தின் மீது பழி சொல்லும் இடதுசாரி சிந்தனையின் கதைப்படம்.

Sunday, September 1, 2013

புரிதல்

(படித்ததில் பிடித்தது)


பிறந்த பின்
ஆண்டுகள்
ஓடிய பின்னர்
புரிந்துகொண்டேன்
பிறந்தேன் என்பதை

நிகழ்தலில் இல்லை
நிகழ்வது என்பது
புரிதலின்போதே
நிகழ்தல் அறிந்தேன்

காதல் செய்ததோ
இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ
ஐம்பது வயதில்



Who I Am

வாழ்தலில் இல்லை
வாழ்க்கை என்பதும்
வாழ்தல் முடிந்த பின்
வாழ்க்கை உணர்தலும்
வாழ்க்கையின் முழுமை
என்பதை அறிந்தேன்

எனில்,
சாதல் அடைந்த பின்
சாதலே இன்றி
இருப்பதும் நிஜம் எனில்
இறந்திட மாட்டேன்!

- பா.கிருஷ்ணன்

Saturday, August 24, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 19

எழுதுகோலில் மசியில்லை
கொட்டிக் கிடக்கும் கவிதைகள்..

விசாரிக்க ஆளில்லை
விசித்து விசித்தழும்
வெள்ளருவி..
                                


விழுந்து புரளவும்
எவருமில்லை
பச்சை போர்த்திய
புல்வெளி..

இருப்பை உணர்த்த 
சுருங்கி விரிந்தாலும்,
நாட்காட்டியில் மட்டுமே 
பௌர்ணமியும் அமாவாசையும்..

கொள்ளை அழகோடு 
வயதுக்கு வந்தாலும் 
எவரும்   தொட மறுக்கும் 
பருவ மழை ..
                                    
சன்னலோர
இருக்கை கிடைத்தும்
நம் பயணமெல்லாம்
கண்களை மூடியபடியே..

Wednesday, August 14, 2013

தலைவா - It's a die!



(Spoiler filled review.. please read after watching the movie!)

வெகு நாட்களாய் நான் செய்யாத சில விஷயங்களை மீண்டும் செய்யத்தூண்டியதர்க்காக / நினைவுபடுத்தியதற்காக இயக்குனர் விஜய்க்கு நன்றி. அவை -

1. முழு நீள blog post எழுதுவது.
2. சினிமா விமர்சனம் எழுதுவது.
3. திரைப்படம் முடியும்முன் அரங்கை விட்டு வெளியேறுவது.
4. நீண்ட நாட்கள் கழித்து ஒரு 'விஜய்' படம் பார்த்தது 

நன்றி தலைவா! (ரிலீஸ் அன்றே அமெரிக்காவில் முக்கால் படம் பார்த்துவிட்டேன்.)

இயக்குநர் விஜய், நடிகர் விஜய் இருவருக்குமே சொந்த சரக்கில் நம்பிக்கை இல்லை என்பதற்கு இன்னொரு சான்று தலைவா.

தனது தந்தையின் முகவரி கூட தெரியாமல், ஆஸ்திரேலியாவில் வளரும் விஜய், அவரின் மரணத்திற்குப் பிறகு  மும்பைவாழ் தமிழ் மக்களின் அடுத்த தலைவனாகும் கதை.

தமிழில் தேவர் மகன், ஹிந்தியில் சர்கார் ராஜ், ஆங்கிலத்தில் காட்பாதர் என வந்த கதைதான். அந்தப்  படங்களை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு படுத்த மாங்கு மாங்கென்று உழைத்திருக்கிறார் எ.எல்.விஜய் - படத்தின் இயக்குனர். படத்தின் டைட்டில் கார்டில் ராம் கோபால் வர்மா, மணிரத்னம் இருவருக்கும் சமர்ப்பணம் என்கிறார். அவர்கள் கோர்ட்டில் மான நஷ்ட கேஸ் போடாமல் இருக்கவேண்டும்! 

படத்தின் ஒரே நோக்கம் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் அமைப்பது. அதற்க்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட  ஒவ்வொரு காட்சியும் அதில் வரும் வசனங்களும் நம்மை அசௌகர்யப்படுத்தியதே தவிர அஸ்திவாரம் போட்டது மாதிரி தெரியவில்லை.




இவற்றை எல்லாம் எப்படி யோசித்திருப்பார்கள்? சிறு கற்பனை 

*******************************************

"விஜய் சார், படத்துல என் மகன் காரக்டர பாத்து மக்களுக்கு அடுத்த தலைவன் இவன்தாண்டான்னு  மனசுல பதியனும்.." - இது S.A.C 

"பண்ணிடலாம் சார்"

"எதாவது ஐடியா சொல்லுங்கண்ணா  பாப்போம்.." - நடிகர் விஜய் 

"அடுத்த வாரிசுன்னா கண்டிப்பா தேவர் மகன், காட் பாதர் மாதிரி பண்ணிடலாமா சார்?" 

"அதெல்லாம் நீங்க பாத்துக்கோங்க.. அடுத்த எலக்ஷன்ல என் பையன் 96ல ரஜினி மாதிரி இருந்தா நல்லது.."

"ம்ம்ம்.. கண்டிப்பா சார்.. வாரிசு..ம்ம்ம் . படத்துல உங்க அப்பா பெயர் ராமச்சந்திரன்.. எம்.ஜி.ஆர்  மாதிரி.. என்ன சொல்றிங்க? நீங்க அவரோட வாரிசு..ஓகே வா?"

"அதுதான் கடுப்பு எம்.ஜி.ஆர்..சாரி.. கருப்பு எம்.ஜி.ஆர் வந்துட்டாரே ஆல்ரெடி .. வேற வேற!"

"ம்ம்ம் ... அண்ணாதுரைன்னு வெச்சுட்டா?"

"ம்ம்ம்... இப்டி பண்ணா என்ன? ராமச்சந்திரனையும் அண்ணாத்துரையையும் சேத்து ராமதுரைன்னு வெச்சுட்டா?"

"மேல சொல்லுங்க..."

"அப்டியே அவரு பெரிய தாதாவா வந்த ஒடனே எல்லாரும் அவரை அண்ணான்னு கூப்பிட ஆரம்பிக்கறாங்க"

"சூப்பர் சார் சூப்பர் சார்"

"படத்துல "இவன் சின்ன பையன் இல்ல..அண்ணாவோட பையன்"ன்னு டயலாக் வைக்கலாம்.."

"அடுத்த அண்ணா இவந்தாண்டா - இது எப்படி இருக்கு?" 

"அம்சமா இருக்கு சார் ... அப்டியே ப்ளோல யோசிக்கலாம்.."


*****************************

"அப்புறம்ங்ணா நமக்கு உருப்படியா வர்றது டான்ஸ்ங்க.. அத எப்படியாவது படத்துல வெச்சுடனும்.."

"கண்டிப்பா சார்,, அது இல்லன்னா உங்க படத்துல வேற என்ன இருக்கும்..? இந்த சூர்யால இருந்து மிர்ச்சி சிவா வரைக்கும் பிளாஷ் மாப் (flash mob) டான்ஸ் ஒண்ணு பண்ணிட்டாங்க.. ஆனா நீங்க இன்னும் ..."

"பண்ணுருங்கண்ணா... அப்பறம் அப்பா சொன்னாருங்கண்ணா நமக்கு ஃபாரின்லயும் சென்னைலயும் நல்ல மார்க்கெட்டுங்க..சௌத்லதான் கொஞ்சம் இடிக்குது.. அப்பறம் மத்த ஸ்டேட்லயும் நம்ம மார்க்கெட் கொஞ்சம் சுமார்தாங்க.. அதுக்கு எதாவது செய்யலாமா?"

"நீங்க சொல்ல சொல்ல எனக்கு கண்ணு முன்னாடி ஸ்க்ரீன்ல வரிங்க சார்... உங்க அப்பா திருநெல்வேலி..ஆனா அவரு பாம்பேல பெரிய டான்.. அவருக்கு நீங்களும் அப்படி ஆகிடக்கூடாதுன்னு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்.. அங்க நீங்க டான்ஸ் ட்ரூப் ஒண்ணு வச்சுருக்கிங்க.."

"கலக்குறிங்கண்ணா.. டான்ஸ்.. திருநெல்வேலி.. ஆஸ்திரேலியா..டான்..சூப்பர்!"

"வேற ஏதாவது வேணுமா சார்?"

"இந்த யோ (yo) பசங்க நம்ம பக்கம் திரும்பக்கூட இல்ல இன்னும்.. அவங்க மார்கெட்டுக்கு?"

"சார் என்னா சார் நீங்க கையில வெண்ணை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலையலாமா?"

"என்னங்கண்ணா சொல்றிங்க?"

"அட! நீங்க இப்போ சொன்னத அப்படியே englishல சொல்லுங்க"

"எதைங்கண்ணா?"

"அதைத்தான்"

"What brother - இப்படியா?"

"அதேதான்.. அப்படியே அத சுருக்குங்க.."

"what bro"

"அவ்வளவுதான் ப்ரோ! இந்த அனிருத் மாதிரி ஆளுங்களும் உங்கள follow பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க"

"சூப்பர்ங்கண்ணா..வ்வ்வ்..சாரி .. சூப்பர் ப்ரோ!"

"பண்டாச்டிக்.. காரக்டரோட ஒட்டிடிங்க.."

***************************

இதுவரை நடந்த டிஸ்கஷனை S.A.Cயிடம் கூறிவிட்டு they were waiting..

***************************

"தம்பி, நீ துப்பாக்கி படத்துல நாலஞ்சு வார்த்தை englishல பேசினது பயங்கரமா பத்திக்கிச்சே! அது மாதிரி ஏதாவது வெய்க்கனும்ப்பா."

"வச்சாச்சு சார்" - டைரக்டர் 

"சொல்லுங்க பாப்போம்"

"அதாவது - அண்ணா போனதுக்கு அப்புறம், விஜய் சார் தான் அந்த மக்களுக்கு எல்லாம். அப்போ அந்த ஏரியா பிக்-பாக்கெட் ஒருத்தன புடிக்க கார்ல நாலஞ்சு அடியாட்களோட கெளம்பராறு.. அந்த பிக்-பக்கெட்காரனை புடிக்கரதுதான் ஒரு மக்கள் தலைவனுக்கு ரொம்ப  முக்கியம்.. அப்போ சொல்ற வசனம் - Its a do.. or die! ஓகேவா சார்?"

"ஏதோ ஒண்ணுப்பா இந்த மெட்ராஸ் பசங்க மார்க்கெட்ட புடிக்கணும்.. மத்த படி அரசியல் இல்லையே படத்துல.."

"அதுக்குதான் சார் உங்ககிட்ட வந்துருக்கேன்..."

"சரிப்பா.. என் மகன் எப்போ தலைவன் அவதாரம் எடுக்கறானோ அப்போ மக்களை பாத்து எதோ ஒரு உயரமான எடத்துல இருந்து டாட்டா காமிக்கணும்.. அதும் M.G.R மாதிரியே காமிக்கணும்.."

"M.G.R டாட்டா காமிக்கறது மாதிரி நான் எங்க சார் கண்டுபுடிக்கறது?"

"தம்பி, நன் இவ்வளவு நேரம் சொன்னது இருவர் படத்துல ஒரு சீன் வரும். அதைத்தான். அந்த படம் பாருப்பா"

"சரி சார்"

"தலைவன் ஆன ஒடனே அவன் வெள்ளை சட்டை மட்டும்தான் போட்டுக்கணும்.. அதுவும் டைட்டா அரைக்கை சட்டை.. எல்லாம் MGR ஸ்டைல்!"

"வேஷ்டி?"

"என்னப்பா நீ! என் பையன் யூத்துப்பா.. வெள்ளை சட்டை.. ஜீன்ஸ்..ஒரு கருப்பு கூலிங் கிளாஸ்!"

"ஓ!"

"படத்துல சின்னக் குழந்தையில இருந்து பாட்டி வரைக்கும் என் மகன் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டுதான் காப்பாத்தணும். ஸ்லோ மோஷன்ல அஞ்சாறு சீன் நடந்து வர்றது மாதிரி வைக்கணும்... அப்புறம் மக்களுக்காக த்யாகம் பண்ணி அவங்களோட மனசு நோகாம கல்யாணம் பண்ணிக்கணும்.. தலைவா தலைவான்னு பாட்டு ஓண்ணு கண்டிப்பா இருக்கணும்..எல்லாரும் அவனை மகன்னு சொல்லணும் .. இருக்கற எடம் கோவில்ன்னு சொல்லணும்...சின்ன பசங்க எல்லாம் அண்ணான்னு சொல்லணும்..."

"ஓகே சார்..."

"இதுக்கு மேல நீதான் சொல்லணும்... நானே சொல்லிட்டு இருந்தா எப்படி.. நான் கட்சிக்கொடி டிசைன் முடிவு  பண்ண போகணும்..வரேன்!"

"சார் எனக்கு ஒரு ஆசை.."

"சொல்லுப்பா"

"விஜய்சார் டான்ஸ் மாஸ்டர் ரோல் பண்ணறார்.. அதுனால புன்னகை மன்னன்ல வர்ற மாதிரி இவருக்கும் அமலா பாலுக்கும் ஒரு டான்ஸ் தீம் வைக்கலாமா?"


"அதுவும் காப்பிதானா? அமலா பால்தான் ஹீரோயினா?"

"நான் தான சார் டைரக்டர்.. சோ அவங்கதான் ஹீரோயின்" என்று வழிகிறார் விஜய்..

"எதோ நல்லா இருந்தா சரி"

***********************************************


இவற்றோடு மானே தேனே பொன்மானே என்று நான்கைந்து சீன்களை எடுத்து படத்தை முடித்து விடுகிறார்கள் (என்று நினைக்கிறேன்.. நான் அரங்கை விட்டு வெளியேறியபோது இன்னும் climaxகூட வரவில்லை..)

விஜய் பார்க்க நன்றாக இருக்கிறார், வழக்கம்போல் நன்றாக ஆடுகிறார். சந்தானம் வெளுத்துக்கட்டுகிறார்.




சத்யராஜ் பெரிய டான் என்று எல்லோரும் திரையில் சொல்கிறார்கள். ஆனால் எதோ கடனுக்கு டானாக இருப்பது போலத்தான் தெரிகிறது. ரொம்பவும் சோகமாகவும் பயப்பட்டுக்கொண்டும் இருர்க்கிறார். நாயகனில் வேலுநாயக்கர் டான் என்றல் நம்பலாம். தேவர் மகனில்பெரியதேவர் ஊரில் பெரியவர் என்றால் நம்மால் நம்ப முடியும். காரணாம், அவர்களிடத்தில் ஒரு கோவம் இருக்கும். அந்த கதாபாத்திரத்தின் மேல் மக்களுக்கு பயம் கலந்த பிரியம் இருக்கும். மனம் இருக்கும். ஒரு நோக்கு இருக்கும். ஒரு தெளிவு இருக்கும். சத்யராஜிடம் இவை ஒன்றுமே இல்லை. எங்கோ கடலுக்குள் தலைமறைவாக தீவிரவாதிபோல் வாழ்கிறார். சாந்தமாக பேசுகிறார் கையெடுத்து கும்பிடுகிறார் (காதலியின் தந்தையிடம்).கெத்து பத்தவில்லை 

வேலுநாயக்கன் இறந்தபோது, பெரியத் தேவர் இறந்தபோது இருந்த பாதிப்பு சத்யராஜ் கதாபாத்திரம் இறக்கும்போது இல்லை. துளியும் இல்லை. அதனாலேயே இவருக்கு வாரிசு வந்தால் என்ன வராவிட்டால் என்ன? என்று தோன்றுகிறது. அந்த ஏனோ தானோ வாரிசாக விஜய் வரும்போது மனதில் நிற்கவில்லை . முழுக்க முழுக்க இயக்குனரின் குற்றம். 

காட்பாதர் முதல்பாகத்தில் முதல் ஒரு மணி நேரம் டான் கார்லியோனேவை சுற்றித்தான் படம் இருக்கும். தேவர் மகனிலும் அதே! அந்த கதாப்பாத்திரங்கள் மனதில் ஓட்ட அந்த அவகாசம் தேவை. இதில் முதல் பாதியில் சந்தானம்தான் மனதில் ஓட்டுகிறார்!! என்னத்த சொல்ல!?


  நாசர், பொன் வண்ணன், மனோ பாலா இருக்கிறார்கள். Y.G.மகேந்திரன் அவ்வப்போது வந்து பஞ்ச் டயலாக் அல்லது விஜய்-யை தலைவன் என்று அறிவித்துவிட்டு செல்கிறார் - why ஜீ?

வசனங்களும் பாடல்களும் படு மோசம்.ஏற்க்கனவே ஆழம் இல்லாத கதாப்பாத்திரம் விஜய்க்கு. இதில் அவர் குடித்துவிட்டு "வாங்கண்ணா வணக்கங்கண்ணா" என்று ஆடுகிறார். இப்போது புரிகிறது கமலின் ‘Of course Velu Nayakan doesn’t dance’

 "தலைவா தலைவா" என்றொரு பாட்டு வருகிறது. பாடியிருப்பது ஹரிசரண். இளமையான குரல். அனால் திரையில் டர்பன் கட்டிக்கொண்டு 70 வயது தாத்தாக்கள் பாடுகிறார்கள் ஆடுகிறார்கள். சகிக்கவில்லை... அதே பாட்டில் "தளபதி தளபதி" என்றும் வருகிறது :) தலைவனா? தளபதியா? இரண்டும் முற்றிலும் வேறு. விஜய் தலைவன் என்றால் யாரை தளபதி என்கிறார்கள்? விஜயோடு சுற்றிக்கொண்டிருக்கும் யாரையோவா? 'இல்லை இல்லை விஜய்தான் எங்கள் தளபதி' என்றால் யார் தலைவன்? :)  only the confusions!!

இது போதாதென்று மும்பை நமக்கு ஒட்டவில்லை. மும்பையில் மிலிட்டரி ஆபீசர் - ஓ.கே. மும்பையில் டான் - ஒ.கே.. மும்பையில் தலைவன்? கஷ்டம்! செண்டிமெண்ட் பார்த்து சொதப்பியிருக்கிறார்கள். ஒரு வில்லன் வருகிறான். கேட்ட காமெடி! சத்யராஜை கொலை செய்வதற்கு "ராமு..ராமு" என்று த்யானம் இருக்கிறான்.. விஜய் வந்தவுடன் "விஷ்வா..விஷ்வா" என்று விஜய்யை அல்ல, நம்மைக்கொல்கிறான்.இந்த மாதிரி வில்லன்கள் கொஞ்ச நாள் காணாமல் போயிருந்தார்கள் . கவலையாக இருக்கிறது. 

ஆக, படத்தில் இயக்குவதாக நினைத்துக்கொண்டும், இசை அமைப்பதாக நினைத்துக்கொம்டும், அரசியல் அஸ்திவாரம் என்று நினைத்துக்கொண்டும் ஏதேதோ செய்திருக்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை. எழுந்து வந்துவிட்டேன். சொச்ச படத்தையும் பார்த்தால் பிறகு update செய்கிறேன்,

விஜய் அரசியலுக்கு வர லாயக்கு இல்லாத ஆள். யோசித்துப்பர்த்தால் இறந்த வீட்டில் வாழ்த்து சொல்லும் தலைவருக்கு விஜய் தேவலைதான். இருந்தாலும்.. ரொம்ப கஷ்டம்ப்படும்!!

இந்தப்படம் வெளிவராததற்கு ஒரு இளைஞன் தற்கொலை செய்திருக்கிறான்! எவ்வளவு பின்தங்கி   இருக்கிறோம்? ஒரு வேளை வெளிவந்தால், மேலும் சிலர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதை.

உண்மையில் என்னால் இன்னும் அதிகம், படம் பற்றி, திரையரங்கில் பலர் அடித்த கமெண்ட் பற்றி என்று எழுத முடியும்… ஆனால், எனக்கே பாவமாக இருப்பதால், இதோடு முடித்துக்கிறேன்.

தலைவா - "ஒரு தடவ தலைவா படம் பாத்துட்டா ஒண்ணு தலைவலிக்கும் இல்ல தூக்கம் போகும்..நிம்மதியா மட்டும் இருக்க முடியாது!"

இந்த ரிலீஸ் பிரச்சனை எல்லாம் சும்மா உள்ளுள்ளாய்! படம் கல்லா கட்ட ஒரு நாடகம்!

Wednesday, July 24, 2013

Friday, July 19, 2013

கித்துவம் #1



நம்ம ஊர்ல சில பல கல்யாணங்கள் matter-காகவும்  money-காகவும் நடக்கரதுனாலதான், அதை matter+money = matrimony-ன்றாங்களோ?


PS: என் இனிய நண்பர்களே - I am back!




Wednesday, February 13, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 18


தமிழின் ஆறாம் திணை 


'இதயம்'- காதலும் காதல் சார்ந்த இடங்களும்..

காதலர் தின வாழ்த்துக்கள்

Valentine's day Special



இந்தப் பாடலுக்கு எழுத்தும் குரலும் பிரதீப் குமார். மெல்லிசைப் பாடல்தான். பாடல் நெடுகிலும் வரும் மெலிதான டிரம்ஸ் இசை, வரிகளைத் தழுவி, வார்த்தைகளைப் பாதிக்காமல் ரசிக்க வைக்கிறது.

"அருகே உன் நிழல் பார்த்தாலுமே துரும்பாகப் பறப்பேனே
ஒரு பார்வை, ஒரு வார்த்தை போதும் கண்ணே!" – எனக் காதல் ஏக்கம் பேசும் பாடல்.

Movie               : Uyir Mozhi
Release Year     : 2012
Directed            : Rajaa
Cast                 : Sartaj, Keerthi, Charms and Raithraiah
Music               : Santhosh Narayanan
Lyrics              : Pradeep, Arun Raja, Na.Muthukumar, Muthamilselvan
Singers            : Pradeep Kumar
Music              : Santhosh Narayanan
Lyrics              : Pradeep Kumar
===========================================================

oru murai
oru paarvai oru vaarthai
pothum kanne
maru murai..unai paarkka
udan pesa..marapene

aruge unthan nizhal paarthalume
thurumbaaga parapene

oru paarvai oru vaarthai
pothum kanne
maru murai..unai paarkka
udan pesa..marapene..

ennulle yethetho..
maatrangal unnaale pirakkum
un swasam ennodu
sernthennai mayakkum

aruge unthan nizhal paarthalume
thurumbaaga parapene

oru paarvai oru vaarthai
pothum kanne

thullaatha idam yethu - naan
illatha pen yaar enru ariyen
kalloorum un thotram
en garvam thudaikkum

aruge unthan nizhal paarthalume
thurumbaaga parapene

oru paarvai oru vaarthai
pothum kanne
maru murai..unai paarkka
udan pesa..marapene

Friday, February 8, 2013

தலீவர் கமல்ஹாசன் வாழ்க!


னது திருமண மண்டபத்தைக் காக்க அரசியலில் குதித்த விஜயகாந்த் போல, விஸ்வரூபப் பிரச்னை காரணமாக அரசியலில் குதிக்கிறார் கமலஹாசன் என்று வைத்துக்கொள்வோம். (கோபம் வராது, இருந்தாலும் எதிர்பார்ப்போம்) என்ன நடக்கும்?


கட்சிக்கு அகில உலக கருத்துச் சுதந்திரக் கட்சி என்று பெயர் சூட்டுவார். கட்சிக் கொடி நிச்சயமாக அமெரிக்கக் கொடியின் சாயலில் இருக்கும். கட்சியின் தொடக்கம் பற்றி தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் பேட்டி கொடுக்கும் கமல், தான் கட்சி தொடங்குவதற்குக் காரணமான 'புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியில் ஆரம்பித்து ஜெய்னுலாபுதீன், ஜெயலலிதா வரையிலான அனைவருக்கும் நன்றி கூறுவார். எதிர்க் கட்சிகளைத் திட்டுவதற்காக அடிக்கடி கவிதை எழுதுவார். அவர் நம்மைத்தான் திட்டினார் என்பதுகூட புரியாமல், சில தலைவர்கள் கமல் கவிதைகள் சிறப்பாக இருப்பதாக பேட்டி கொடுப்பார்கள். உதாரணத்துக்கு ஒரு கமல் கவிதை....

'கன்'னோடு 'கன்'னைக் காட்டினால்
கலவரக்காரன் எச்சரிக்கை
உடனே கூட்டணி கை கோர்த்தானா?
ஒழுக்கம் கெட்டவன் எச்சரிக்கை
ஆளைக் கழிக்கையில் கூடுதல் பேசினால்
அனுபவமிக்கவன் எச்சரிக்கை
தேர்தல் முடிந்த பின் கிடந்து பேசினால்
மீண்டும் உறவு மலரும் எச்சரிக்கை
கவிதை இலக்கியம் பேசினாராயின்
கதைக்கு உதவாது எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்று சொன்னால்
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை

ஆக மொத்தம் ஆழ்வார்பேட்டை வீடுகளில் உள்ள 'நாய்கள் எச்சரிக்கை’ போர்டில் உள்ள 'எச்சரிக்கை’யைவிட கமல் கவிதையில் ஏகப்பட்ட எச்சரிக்கை இருக்கும். இவருடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த கருணாநிதியால் மட்டுமே முடியும். காரணம், இவரைப் போலவே புரிந்தும் புரியாமலும் பேசத் தெரிந்த ஒரே கலைஞன் அவர்தான். ஜெயலதாவிடம் இதே பாணியில் பேசினால், 'கமலஹாசன், எனக்கு சீட்டே வேண்டாம். உங்களுடைய கூட்டணியே போதும் என்றுதான் சொன்னார்' என்று அறிக்கைவிட்டு பீதியைக் கிளப்பிவிடுவார்.
'வேலை வெட்டியை விட்டுவிட்டு வாக்களிக்கச் செல்வதா?’ என்று மக்கள் கருதுவதுதான் வாக்குப்பதிவு குறைவதற்குக் காரணம். எனவே டைரக்ட் டு ஹோம் முறைப்படி செல்போன், லேப்-டாப்பில் இருந்தே ஓட்டுப்போடும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்குக் கோரிக்கை வைப்பார் கமல்.
தேர்தல் நேரத்தில் மீண்டும் அதே வீட்டில் பிரஸ் மீட் போட்டு, 'இந்த வீடு என்னுடையதாக இருப்பதும், இதை நான் இழப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. தேர்தல் செலவுக்காக இந்த வீடு உள்பட சென்னையில் உள்ள எனது சொத்துக்கள் அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டேன்' என்று கலங்கடிப்பார். ஒருவேளை தேர்தலில் தோல்வி அடைந்தால், "நீதான் உலக நாயகனாச்சே... ஏன் இன்னும் உள்ளுரிலேயே இருக்கிறாய்? என்று கேட்காமல் கேட்டுவிட்டீர்கள். அதனால், நான் அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிடப் போகிறேன்" என்று கண்ணைக் கட்டவைப்பார்.
இப்போது புரிகிறதா, "கமலஹாசனின் அரசியலைத் தாங்க மாட்டீர்கள்..." என்று பாரதிராஜா ஏன் சொன்னார் என்று!
கே.கே.மகேஷ்

Monday, January 28, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 17

"இரு இரு..", என்றது 
இலை..
"இதோ - இரண்டே நிமிடத்தில்
இடைஞ்சல் களைகிறேன்.."

"விடு விடு..", என்றது 
வானம்..
"விருட்டென்று கொஞ்சம் 
சிவந்து கொள்கிறேன்..."

"பொறு பொறு..",என்றது 
ஆறு..
"சற்றே பொறுத்திரு 
இசைந்து தவழ்கிறேன்.."

சிடு சிடு - த்தது  
சூரியன்...
"ஒரே நொடியில் 
மங்கி மிளிர்கிறேன்.."

அலைகள் இல்லாத 
கவலையில், காற்றை 
"கொடு.. கொடு" என்றது 
கடல்..

காற்று தந்த அலையை 
தன்னை 
"தொடு தொடு" என்றது 
கரை 

அலங்கார சடங்குகள் எதிலும் 
அசராமல், என்னை  
"எடு எடு" என்றது 
மலை..

.....





புகைப்படங்களில் அடைக்கப்படும் முன் 
இலைகளுக்கோ 
மலைகளுக்கோ 
நதிகளுக்கோ 
மேகங்களுக்கோ 

யாரேனும் 
புன்னகைக்க அவகாசம் கொடுத்தீர்களா?



Thursday, January 24, 2013

Some really smaaal stories - III

This post is a sequel to this, which in turn is a sequel to this...

Night mare!

Shit! Im 62!.. Woke up.
Phew..! Im still 42. Relieved.
Woke up for real.. I was 72!


Love..

Felt lonely with my love..
Ditched my love.. 

Alone now.. Lovely!

Alzheimer's

File:Alzheimer's disease brain comparison.jpg

New friends everyday!


....................
As promised... more to come! :)


Monday, January 14, 2013

ஹைக்கு - 2





அமெரிக்க மார்கழி 

ஜில்லேனக்காற்று 

இலையில்லா மரம்..

Friday, January 4, 2013

புலனடக்கம்


வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
கூழாங்கற்கள் சேமிக்கத்தொடங்கினேன் ..

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது மேகம்..

உள்ளங்கைக் குழியில் 
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி..

உதறிய சிகரெட்டின் 
சிணுகும் கங்கில் 
சிதறி விழுகிறது சூரியன்..

















தனது 
மிச்சத்தை எப்போதும்
குச்சிகளில் விட்டுவைக்கிறது
மரம்...

அதேபோல்..

உருட்டித்திரட்டி 
நீரில் உலுக்கி 
படுவிக்கிடக்கும் கூழாங்கற்களில் 
பிண்டமாய் கிடக்கிறது அண்டம்  
...

எது எப்படியிருந்தென்ன?

நிகழ்ந்தபடியிருக்கும்
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ள
என்ன இருக்கிறது?

இனிப்பும் கசப்பும் சலிப்புமாய் 
சில நினைவுகளைத் தவிர..
......
......
......
......
......
வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
மரக்குச்சிகள் சேமிக்கத்தொடங்கினேன் ..


Thursday, January 3, 2013

மன்னிக்க வேண்டுகிறேன்….. - ஞாநி





அன்புள்ள…..

உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.

டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9 மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும் ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக் கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு,  எதிர்த்த உன்னையும் அடித்துப் போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.  உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும் ஆற்றாமையிலும் என் கண்களில் நீர்  பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும் அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.

உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய்.  நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும்  உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை வைத்திருக்கும் சகோதரிகளிடமும்,  பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான் பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.

உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக் கோருகிறேன்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை விடுமுறை நாளன்று அதன் டிரைவர்  மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித் திரிய  எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை, நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின் குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில் தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும் மன்னிப்பைக் கோருகிறேன்.

மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும் எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும் அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.

படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
நாங்கள்தான் – we the people of Indiaதான்.  காரணம். முதலில் எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள் கொடுக்கத் தவறிவிட்டோம்.
படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை  வழங்கினோம் ? வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும் படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.

அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம். குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது.  மதம் பார்த்தது. ஆணுக்கு அடிமையாக வேலை செய்யவே பெண்  பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக் குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.

உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட, திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான் குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும் வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப் போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை. கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.
உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம்  காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம்  உனக்கு -  உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.
நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.

பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.

குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.
இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….

படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல்  வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம் என்ற ஆணாதிக்க மனநிலை அது.

இந்த சூழலில் படித்தவனாக இருந்தால்  அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான் ?  வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை தண்டிக்க,  பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன் நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள். கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த படி ஏறிப் போகலாம்.
மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல் ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்.  ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான் குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை இடமில்லை.

அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல் வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால் மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம் மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம் ‘பண்பாடு’ மாறவேண்டும்.

இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்.  நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப் பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும் ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க நீ வரவேண்டும்.

அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன்  வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.

அன்புடன்
ஞாநி
சக இந்தியர்கள் சார்பாக.
குமுதம் 26.12.2012