Saturday, August 24, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 19

எழுதுகோலில் மசியில்லை
கொட்டிக் கிடக்கும் கவிதைகள்..

விசாரிக்க ஆளில்லை
விசித்து விசித்தழும்
வெள்ளருவி..
                                


விழுந்து புரளவும்
எவருமில்லை
பச்சை போர்த்திய
புல்வெளி..

இருப்பை உணர்த்த 
சுருங்கி விரிந்தாலும்,
நாட்காட்டியில் மட்டுமே 
பௌர்ணமியும் அமாவாசையும்..

கொள்ளை அழகோடு 
வயதுக்கு வந்தாலும் 
எவரும்   தொட மறுக்கும் 
பருவ மழை ..
                                    
சன்னலோர
இருக்கை கிடைத்தும்
நம் பயணமெல்லாம்
கண்களை மூடியபடியே..

3 comments: