Friday, July 24, 2015

"Bangalore Days" - Its that kind of a movie! ;)

Ok..after hours of work in office and few more hours of work at home, I finally decided to watch "Bangalore days", a star studded mallu flick yesterday after few of my friends harassed me to watch it. You know, just to relax before I hit the bed.. 

It is a good movie - I'll give that.. but not a great one like what I was told! I am no one to judge the commendable effort by a National Award winner - Anjali Menon. But to me the movie is nothing more than a rehash of Dil Chahta Hai, Zindagi Na Milegi Dobara and few good bits from Mani Ratnam; add some Mallu spice and coconut oil to it - you have a neat package called "Bangalore Days". Before you judge me, I can explain it to you..


First lets get to the plot:

Bangalore Days begins with an intro from Kuttan (Nivin Pauly) introducing himself and his cousins namely Divya (Nazriya) and Aju (Dulquer) who share a very friendly relationship right from the childhood.They get separated after their schooling but are reunited at Bangalore after the marriage of Divya to Das. The story revolves around how their life turns at Bangalore.


[Major Spoilers ahead.. DO NOT PROCEED if you haven't seen the movie, or you are OK with spoilers!]


Akshay Khanna x Saif = Dulquer Salman x Nivin Pauly -- this one is wonderful awesomatic aromale mixture I say!


Take the free spirit of Akshay Khanna mix it with Saif's extroversion, add some mallu spice - you get Dulquer! Both Akshay and Dulquer fall in love with 'not-so-usual' heroines of Indian cinema.


                      


Take the hopeless romantic in Saif and mix it introversion of Akshay, add some mallu spice and coconut oil on the head - you get Nivin Pauly! Both Navin and Saif were once betrayed and in love later. Both fall for a foreign girl! 




Vidya Balan from Guru = Parvathy Menon - obvious!




Revathy and Mohan in Mouna Ragam with some mallu spice and a side of banana chips :: Fahadh and Nazriya (note that the genders are reversed). 


Fahadh was a coazh (cool with a mallu nasal enunciation) bike racer with a sad love story - Nithya menon dies. So was Revathy - she was a fun loving girl and Karthik dies. Both those characters are sad in the movie. Nazriya and Mohan misunderstands at first; then make things work.


The Zindagi Na Milegi Dobara connection


First things first, I dont like ZNMD as much as everybody else. I thought it was boring. I don't believe that you need to go road-tripping around Europe or Sky/Scuba diving or have tomatoes thrown at you or have bulls chase you to realize how important life is. A rainy day and an amazing cup of coffee can make you realize that! 


But how is "Bangalore Days" similar to ZNMD? Having gotten the character arc and major story lines from the aforementioned movies, they need sequences to take them through it.. Those sequences are "inspired" from ZNMD. All the characters in this movie including Nivin Pauly's mom come out of their comfort zone. Like how Hrithik overcomes his aquaphobia.. like how Farhan overcomes his fear to meet his dad.. like how his dad apologizes for leaving him while he was a child.. like how Abey Deol realizes he is not in love with his fiance.. Here too there are lot of scenes where characters realize their mistakes, forgive, forget and start letting it go..


I know what you are feeling right now :) .. you must be pitying me for not being able to watch a movie just for the fun of it without being cynical about it.. I know, right? Its just sad!


All these thoughts were going through me while I was watching the movie. Even then, I liked the performances and the cinematography in the movie. 


There is a blatant rip-off of Bryan Adam's "Summer of 69" in this movie - how did that not bother anyone? The music director won the Film Fare that year?! That is incredible! See the youtube video and listen for yourself! 




There is one more song "Ente Kannil Ninaikkai"... which again is a rip off of Carls Bruni's "Someone told me.."

 

Additional thoughts

Why does the movie have to be so slow? I am not against slow movies.. but does this movie have to be this slow? AND LONG? Except for the scene involving Fahadh, Prathap Pothan and a dog; no other scene warrants the slow pace. Were they trying to make everything poetic? Like adults playing with toy bikes? Like sun shining through a glass painting? Like the main trio going to movies? Eating out? Watching girls cross road? Well, for me it was just boring. 


Also - I dont remember Bangalore being that cool like how it is showcased in the movie. If it is now, well and good! I am happy. And how many of us are actually 'dreaming' to go to Bangalore?.. Bombay - I get it.. Bangalore? Not sure. 


Being a 'Tamil'ian, reading this - "You are my kunju!" in the subtitles is downright hilarious! (No offence Mallu friends.. I know this is how you must have felt on seeing Bhagyaraj's "Thooral Ninnupochu" back in the days!)


Having said ALL that, I liked the movie. It is a well executed film. Not engaging or entertaining... but a decent watch. Making a feel good movie with so many stars and under 10 crore budget (year 2014.. ZNMD was made in 55 crore in 2011 and it was not as good as this one), is an achievement. I agree.


You can have it on TV whenever your friends are visiting.. and do your thing not bothering too much about missing the movie. 


Its that kind of a movie!



Monday, July 13, 2015

''மனித வணக்கம்'' - கமல்ஹாசன்

''மனித வணக்கம்'' 
- கமல்ஹாசன்

மனித வணக்கம்.

தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.



தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம்தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சமங்கள் புரியும் வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறு பிறப்பே
மரண செளகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல ..
எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ துவைத்த துணிக் கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

Friday, June 19, 2015

Why Pulp Fiction is not among my favorite movies?

Miramax Pictures

Pulp Fiction is without a doubt one of the most popular and influential movies of all-time. Beloved by critics and cinephiles, and revered by many contemporary filmmakers as the motion picture that inspired them to make their own films, Quentin Tarantino’s 1994 follow-up to his debut, Reservoir Dogs, is a modern classic. Its influence on popular culture is arguably unparalleled, with lines still quoted on a daily basis, over 20 years after its release.

“You get intoxicated by it, high on the rediscovery of how pleasurable a movie can be -  Owen Gleiberman


“A new phenomenon, the movie whose style is created from the context of movie life rather than real life", says Ken Dancyger.

Pulp Fiction is arguably the definitive movie for Generation X: apathetic, wry, and ironic. Saying that, it is not perfect; like all pictures, it has its own flaws and faults and shortcomings which does not ring well with me. I am sure all of us out there feel it but never want to admit it!

I assume that all of you who have sustained their interest till now have watched this movie already and I am not going to delve into the plot right now, instead I am just going to state what did not work for me in the movie.

Problem no.1: "The Bonnie Situation" was boring.. yes I said it. It was "Boring"
----------------------------------------------------------------------------------------
Pulp Fiction is made up of three distinct chapters, though the movie actually consists of five stories: these are “Vincent Vega and Marcellus Wallace’s Wife,” “The Gold Watch,” and “The Bonnie Situation.” The fourth and fifth chapters remain unnamed, but these are the diner scene that opens the movie, and the scenes with Vince and Jules as they encounter Brett and his goons (also where Jules unleashes his famous “great vengeance” speech).

The first four chapters – that is, the unnamed chapters, “Vincent Vega and Marcellus Wallace’s Wife,” and “The Gold Watch” – are each equally watchable and deliciously entertaining from start to finish. But by the time Pulp Fiction gets around to “The Bonnie Situation,” some of the film’s energy falls away and things never really picks up again until the final scene, in which Jules confronts Pumpkin and Honey Bunny in the diner.
“The Bonnie Situation” just doesn’t have enough of the tension or vitality of the previous chapters, and as a result – and despite the appearance of Winston Wolfe – Pulp Fiction begins to lag at Jimmy’s house. The scene feels stretched out and lacks the tightness of what came before. Thus, the skillful momentum of the picture – arguably perfect up until this point – is brought to a disappointing halt 

Problem no.2: It offers nothing to yearn for!
-----------------------------------------------------

When you think about it, Pulp Fiction isn’t about anything it all. It doesn’t stand for anything, it doesn’t tell you anything. ANYTHING. 
Though one could certainly argue that its vapid nature is actually the very point of the movie, that the very intention of Pulp Fiction is as tribute to the vacuous, popular culture-obsessed nature of the ’90s, so what? On a fundamental level, Pulp Fiction has nothing to say – it is fun and exciting and cool and perhaps even brilliant for the most part, but it’s a hollow experience.
In Sam Moore’s essay exploring Pulp Fiction’s twenty years legacy, he echoes the aforementioned idea that the film has nothing to say, but he adds to this criticism when he writes that Pulp Fiction “doesn’t make you feel anything.” The emphasis here is on the word “feel,” in the emotional sense – and he’s completely right.
Pulp Fiction, after all, is more concerned with crafting cool scenes and dropping badass musical cues than it is with getting the audience to feel anything. The movie is essentially the cheeseburger that Jules and Vince talk about during the car ride at the beginning; you eat it and you feel good in the moment, but nothing afterwards. Because Pulp Fiction doesn’t want you to empathize or sympathise. It doesn’t want you to relate to anything.
Jackie Brown, Tarantino’s most underrated movie, works in the opposite way. Audiences are made to care about characters like Jackie and Max, and the film is stronger as a result. It doesn’t take away from the fact that – just like Pulp Fiction – it’s essentially a homage built out of other movies, but it does give the movie something that Pulp Fiction sorely lacks: soul.
However you look at it, a piece of art with a legacy as huge as this one that also has nothing of importance to say… well, it’s a sad state of affairs, really.
Problem no.3: Quentin Tarantino as an actor
-------------------------------------------------------
Need I say more?

Miramax Pictures

Problem no.4: Non-Linear Narrative Is Ultimately Pointless..though cool, its pointless
------------------------------------------------------------------------------------------------------------


One of Pulp Fiction’s defining features – if not its most defining feature – is its non-linear narrative – a flourish that Tarantino borrows from films of the French New Wave in order to make what are arguably three stories more compelling than if audiences viewed them in chronological order.
But apart from rendering events in a way that makes just a few individual moments more “shocking” (the moment when Vincent is killed, for example, only to seemingly return to life in the next chapter; the moment where audiences realize that at the end of the movie they’re in the same diner as they were in the beginning), the effect is ultimately inconsequential.
There is no “need” for the movie to be non-linear. It doesn’t serve a purpose as it does in a film like Memento, where the technique is used to convey the frustration felt by its amnesia-clad protagonist. Ultimately, Tarantino makes his picture appear far more clever than it actually is in his use of a non-linear narrative; it has no true bearing on the story being told.
That's it! I finally have said those things that had me in doubts about my taste in movies for years. 
Pulp Fiction is not QT's best! It might have been revolutionary - I am not old enough to comment on that. But as a movie, it did not engage me like the other masterpieces from Tarantino!
Having said that, I don't mean to disrespect one of the greatest creators of our generation, Quentin Tarantino. Just that I feel there are better movies of QT that deserve the praise and the adulation that Pulp Fiction gets. 
Unlike the movie, I hope you could in someway relate to my thoughts about Pulp Fiction :)


Thursday, May 7, 2015

வெண்டைக்காய் புளிக்குழம்பு - சிறு கதை | Vendaikkaai PuLikkuzhambu - Tamil Short story


ஆடம்பரங்களுக்கும், அத்தியாவசியங்களுக்கும் அனாவசியங்களுக்கும் வித்யாசம் தெரியாமல் தத்தளிக்கும் தம்பதிகளின் ஜன சந்தையில் புதிதாய் சேர்ந்தவர்கள் ரவியும் நிரஞ்சனாவும். தமிழ் மேட்ரிமோனியில் பல 'கிளிக்'குகளுக்குப்பிறகு, முதல் உரையாடலிலேயே லேசாய் பிடித்துப்போய், பிடிக்காமல் போக அவகாசம் அளிக்காமல் தடாலென திருமணம் முடித்தவர்கள்.  இன்று வரை லேசாய் பிடித்திருப்பது - ஆச்சர்யம்..

 அடர்த்தியான சீராய் ட்ரிம்  செய்த  மீசை, 6 அடி, கோதுமை நிறம், கச்சித உடல், நேற்றித்தழும்பு, ஸ்லீவ்லெஸ்/ஷார்ட்ஸ், ரஹ்மான், எப்போதாவது சரக்கு பார்ட்டி,ரூபிக்ஸ் கியூப், செஸ், ஈ.எஸ்.பீ.என்., கிரிக்கெட் -  ரவி.

மைதா நிறம், பக்க  வகுடு, நெற்றிக்குங்குமம், விண்டோ ஷாப்பிங், சுடிதார், பீச், மிளகாய் பஜ்ஜி, மாவடு, வேலை, சுத்தமான வீடு, ரவி..ரவி..ரவி  - நிரஞ்சனா. 

2BHK வாடகை பிளாட், படுக்கை அறை A/C, வாரம் ஒரு முறை மரினா, நல்ல திரைஅரங்கில் ஒரு படம், அவ்வப்போது ரெஸ்டாரன்ட் , கொஞ்சம் சேமிப்பு, சில்லறை கோபங்கள், சமாதானங்கள் என்று இயல்பாய் வாழும், இன்னும் புதிதாய் இருக்கும் இளைஞர்கள். 

அசோக் - இவர்கள் இருவருக்கும் நண்பன். ஒரு சனிக்கிழமை மாலை ரவியிடம் எதோ பேச வேண்டும் என்று வந்திருந்தான். வந்ததிலிருந்துபெரிதாய் ஒன்றும் பேசவில்லை. வெகு நேரம் கழித்து நிரஞ்சனா குடுத்த காபியை ஒரு சிப் சிப்பிவிட்டு - 

"இது, காபி..இது?.." என்று ரவியைப்பார்த்து கேட்டான்.

ரவி என்ன சொல்வதென்று தெரியாமல் வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கையில்

"...காபி..." -என்று முடித்தான்,  கோபத்தோடும் விரக்தியோடும்.
"என்னடி சொல்றான்?", என்றன ரவியின் கண்கள். "என்னை கேட்டா?" என்றது நிருவின் பிதுங்கிய வாய்.


"என்னடா ஆச்சு? எதோ பேசணும்ன்னு சொன்ன?

"டேய்..என் பொண்டாட்டி மண்ணு மாதிரி சமைக்கராடா!", என்றான். 

"எனக்கு புரியல... கொஞ்சம் நிதானமா சொல்லு "

"உனக்கு எப்படிடா புரியும்.. நிரஞ்சனாதான் நல்லா சமைக்கராங்களே!"

"என்னடா ஆச்சு?"

"சிஸ்டர்..நீங்களே சொல்லுங்க. ஒரு மனுஷன் வீட்டுக்கு நாயா வேலை பாத்துட்டு வர்றான். வர்றவனுக்கு வாய்லயே வைக்க முடியாத மாதிரி சமைச்சு போட்டா என்ன பண்ணுவான்? கோவம் வராதா?"

ரவியும் நிரஞ்சனாவும் அவன் மேலும் தொடர அமைதியாய் இருந்தார்கள்.

"ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல. டெய்லி உப்பு சப்பு இல்லாம சாப்படனும்னா நான் என்னதான் பண்றது? தோசை செஞ்சா புளிக்குது.. இட்லி செஞ்சா கல்லு மாதிரி இருக்கு. உப்புமா செஞ்சா வேகாம இருக்கு. சாதம் கொழயுது.. சாம்பாருக்கு பதிலா நெஜம்மாவே மண்ண சாப்டலாம். அதையாவது  மண்ணுன்னு தெரிஞ்சு சாப்பிடுவோம். இது ஏமாத்து வேலை! எப்படி 'அப்படி' ஒரு சாம்பார் பண்ண முடியுதுன்னு தெரியலை..பண்ணி அவளே எப்படி சாப்பிடுறான்னும் தெரியலை. ரவி, நீயெல்லாம் சாப்பிட்டேன்னா ஹாஸ்பிட்டல்ல   அட்மிட் ஆகிடுவ! டெய்லி வெளில சாப்பிட முடியுமாடா?"

"ஹோட்டல்லயா டெய்லி?"

"ஹோட்டல்லயாவது டெய்லி..!"

ரவிக்கு ஓரளவு புரிந்தாலும் இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. 

நிரஞ்சனா கொஞ்சம் மௌனம் கழித்து நிதானமாக ,"அட்லீஸ்ட் ட்ரை பண்றாங்களா?"

"தெரியல சிஸ்டர். எனக்கு புடிச்சுருக்கா புடிக்கலையா ஒண்ணுமே கண்டுக்கற மாதிரி தெரியலை..."

"சமையலுக்கு ஆள் வேச்சுக்கோயேண்டா?"

"ஆள் புடிச்சு தரியா?"

"இத பேசத்தான் வந்தியா?"

"அது கெடக்கு!! பொலப்பத்த கேளுடா! டேய், நான் பொண்டாட்டி கையால சாப்பிடனும்ன்னு நினைக்கறது தப்பா? பொண்ணு பாக்க போறப்போ சமைச்சு காமின்னா சொல்ல முடியும்?"

"சொல்லலாம்...!"

"நீ சொன்னியா?!"

"இல்லடா.. சொல்லலாம்ன்னு சொல்றேன்.. பசங்களுக்கு  கொஞ்சம் இளகுன மனசுடா.. சிரிச்சு பேசினாலே தலை ஆட்டிடறோம் .. என் அபீஸ்ல ஒரு பொண்ணு, ஒரு பையன ரிஜெக்ட்  பண்ணிட்டா . ஏன்ன்னு கேட்டா, ரொம்ப நல்லவனா இருக்கான்ன்னு சொல்றா ."

"அது சரி.." என்று சன்னமாக சிரித்தான்.

அவனை கொஞ்சம் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான். அவன் பேசவேண்டும் என்று வந்த விஷயம் பற்றி பேசாமலேயே சென்றான். சமையலுக்கு ஆள் தேவை விளம்பரம் நாளை தினமணியில் வரும். உங்களுக்கு யாரையாவது தெரிந்தால் 9098767890க்கு அழைக்க சொல்லுங்கள். பாவம்.

                                                                   * * *

அன்று இரவு - 

"கீதா அவ்வளவு மோசமாவா சமைப்பாங்க?"

"தெரியலையே.. ஒருத்தன் இவ்வளவு நொந்து போயிருக்கான்னா மோசமாத்தான இருக்கணும்?"

"ம்ம்.."

"சரி..வெளியில போய் சாப்பிடலாமா?"

"வீட்ல பழசு நிறையா இருக்குடா."

"நல்ல்லா மொரு மொருன்னு தோசை சாபடனும் போல இருக்கு..ப்ளீஸ்!"

"நான் சுட்டு தர்ரேன்.. சாம்பார் எப்படியும் காலி பண்ணனும். நாளைக்கு வரைக்கும் தாங்காது."

"நான் மொரு மொருன்னு சொன்னேன்.. உனக்கு அது வராது. நாளைக்கு ஆபீஸ்க்கு குடுத்து விடு. கடமை தவறாத கணவனா சாப்டுர்றேன்."

"அதெல்லாம் நல்லாத்தான் வரும்.முந்தாநாள்தான் போனோம். அதுக்குள்ள என்ன? என் தோசை போதும் இன்னைக்கு...அதெல்லாம் சரி..நீ அசோக் மாதிரி இப்படியெல்லாம் வெளில யார்டயாது போய் சொன்னன்னு தெரிஞ்சுது.."

"ச்ச..ச்ச.. உனக்கு என்ன. ஓரளவு சுமாரா..."

முறைத்..

".. நல்லாவே சமைக்கற. இன்னும் கொஞ்ச நாள்ல பக்குவம் வந்துடும்.."

...துக்கொண்டே, "ஏன் சொல்ல மாட்ட.. உங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்டாலும் இப்படிதான் பேசுவிங்க.."

"வாய்ல வைக்கற மாதிரி சமைக்கறதே இந்த காலத்து பொண்ணுங்களுக்கு பெரிய விஷயம்... ருசின்னு நீங்களா சொன்னா? நாங்க ஒத்துக்க வேண்டாமா?"

"டேய் உனக்கு சமைச்சு போடத்தான உன் அம்மாட்ட ட்ரெய்னிங்லாம்  போனேன்!?"

"அதுனாலதான் எதோ சுமாரா இருக்கு..ம்ம்ம்..எனக்கு ஏன்னு தான் புரிய மாட்டேங்குதுடி..ஒரே ரெசிபி. என் பாட்டி காலத்துல இருந்து. ஆனா என் பாட்டி ஓட ருசி என் அம்மாகிட்ட இல்லை.. என் அம்மாவோட ருசி உன்கிட்ட இல்லை.. ஏன் உங்களுக்கெல்லாம் அந்த பக்குவம் வரல?"

"அது சேரி! என் தாத்தா வைரம்.. என் அப்பா தங்கம்.. நீ பித்தளை.. அது மாதிரிதான்!"

அடுப்பில் தோசைக்கல் தன் கடமையாற்ற தயார்.

"உன் பாட்டி அவ்ளோ நல்லா சமைப்பாங்களா?", என்றாள் திடீரென்று.

"சொத்த எழுதித்தரலாம்.."


"ம்ம்க்கும்.."

தோசை-இரவுகளில், இவள் சுட, சுட அவன் திண்டின் மேல் அமர்ந்து சுடச்சுட சாப்பிடுவது வழக்கம்.

"சாம்பார் வேணுமா வேண்டாமா? சுட பண்ணட்டா?"

ரவி விட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தான்.

"ரவி!" - கலைந்து திரும்பினான்  - "சாம்பார் சுட பண்ணட்டா வேண்டாமா? அது வேண்டாம்னா போடிதான் இருக்கு. ஓகேவா?"

"சாம்பார் இல்லாத தோசையும் கெட்டி சட்னி இல்லாத இட்லியும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை..ப்ளீஸ் சுட வை"

"இப்படி பேசி பேசியே..ஏ..." என்று அவன் காதை திருகி, தலை கோதினாள்.

மீண்டும் விட்டம்...

ஒரு தோசை... மௌனம்... இரண்டாம் தோசை...

"என்ன சார் யோசிக்கறிங்க?"

"என் பாட்டி வைக்கற புளிக்குழம்ப பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்.."

"இன்னுமா?" என்று அவள் கேட்டதை கவனிக்காமல் - 

".. .. என் பாட்டி வீட்டுக்கு போனாலே என்ன சமையல் பண்ணுவான்னு தான் மண்டைக்குள்ள ஓடும்..எழுந்த உடனே ஒரு பில்டர் காபி. அளவா ஒரு டிபன் முடிச்சுட்டு வெட்டியா டி.வீ. பாத்துட்டு இருக்கப்போ என்னென்ன யாராருக்கு வேணுமோ அந்தந்த காய் கறி வாங்கிட்டு வந்துடுவா.. வெல்லம்  வாங்கிட்டு வந்தா  சர்க்கரைப்பொங்கல்... முள்ளங்கி வாங்கிட்டு வந்தா சாம்பார்.. வெண்டைக்காய் வாங்கிட்டு வந்தா.."

"பில்ட்-அப்ப கொரைடா!"


"பொரியலுக்கா? கூட்டுக்கா? பச்சடிக்கா ? குழம்புக்கான்னு குழப்பம் .. நான் நைஸா 'பாட்டி, குழம்புதான?'ன்னு கேட்ருவேன். இல்லைன்னு சொன்னதே இல்லை."

"ம்ம்.."


"மல்லி, கருவேப்பிலை, பூண்டு, பட்டவத்தல், வடகம் போட்டு நல்லெண்ணையில அவ வறுக்கும்போது ஒரு வாசம் வரும் பாரு.. ஐயய்யோ! மூச்சுக்கும் வாசனைக்கும் சண்டை வரும்.,வீடே கம கமன்னு!"

"ச்சை...ஏன்டா மானத்த வாங்கற!?"

"நல்லா வத்த விட்டு சுட சுட அதை சாதத்துல பிசஞ்சு, நல்லெண்ணெய் விட்டு, நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டு சாப்பிட்டா.. அடடடடா!! அடுத்த க்ஷணம் அப்படியே செத்து போயிடலாம். நேரா சொர்க்கம்தான்"  - என்று கூறும்போதே வாய் கலங்கியது.. கண் ஊறியது.."ஸ்ஸ்ஸ்ஸ்ல்ரப்" என்று எச்சிலை விழுங்கினான்.

"டேய்.. பேசாம சாப்புடு..!"

"உண்மைதான்..நேரா சொர்க்கம்"

"அட.. இந்த பசங்க கொஞ்சம் சமையல் தெரிஞ்சு வேச்சுக்கிட்டு ரொம்ப ஆட்டம்.."

"ஹலோ..சமையல் பெரிய விஷயமே இல்ல. நீங்கதான் அதுக்கு ஓவரா சீன் போடறிங்க.. எங்களுக்கும் தெரியும்

"என்ன தெரியும்?"

 "பருப்பில்லாத சாம்பார் - ரசம்னும்; பருப்பு போட்ட ரசம் - சாம்பார்ன்னும்.."

"அட ராமா!"

"இந்த புளிக்குழம்புதான் சிக்கலா இருக்கு அந்த பதம். அந்த மனம். வர மாட்டேங்குது."



"டேய் நிம்மதியா சாப்டுடா.. புளிக்குழம்பு வரல..சாம்பார், பருப்புனுட்டு.. எனக்கு ஒரு வண்டி வாங்கணும்ன்னு பிளான் பண்ணோமே அதுக்கு யோசிச்சியா? கொடைக்கானல் போகலாம்ன்னு யோசிச்சோம்.. அதுக்கு பிளான் போட்டியா? செல் போன் பில் கட்டினியா? போன மாசம் பைன் போட்டான் அது என்ன ஏதுனு கேட்டியா?"

"அடடா! அதெல்லாம் காசு குடுத்தா அன்னைக்கே வந்து நிக்கும்மா.. இதெல்லாம் அப்படியா?! உனக்கு எப்போதான் தெரிய போகுதோ?"

அதன் பிறகு இருவரும் உறங்கச்செல்லும் வரை பேசவில்லை. அசௌகர்ய மௌனம். தூக்கத்தில் அணைத்துக்கொண்டாள். அணைக்க விட்டான்.

-------------

மறுநாள் ஒன்றும் நடக்காததுபோல் இருவரும் தமது அலுவலகம் சென்றார்கள்.

ரவிக்கு அன்றும் பாட்டியின் ஞாபகம் அகலவில்லை. ஒரு வேளை வீட்டில் வளர்த்த கருவேப்பிலையா? வெங்காயம் நறுக்கும் விதமா? மில்லில் அரைத்த மிளகாய்த்தூளா? எதிலிருந்து அந்த புளிக்குழம்பு ருசி பெற்றது? அல்லது அவளது கைமணமா? பெண்களின் கைகளுக்கு இயற்கையிலேயே  மணம் உள்ளதா?சொக்கா! பதில் கூறும்!

கம்ப்யூட்டர் மானிட்டரில் கடுகு வெடித்தது.

சதீஷிடம் (ரவியின் மேனேஜர்) அவசர வேலை ஒன்று இருப்பதாய் கூறிவிட்டு கிளம்பினான்.
-------------

வீட்டிர்க்குச் செல்லும் வழியில் அவன் சிறு வயதில் பரிச்சயமான ஒரு மில் இருந்த இடத்திற்கு சென்றான். மில் இல்லை. 'கொஞ்சம் காஸ்ட்லி ஆனா ப்ரெஷ்ஷா இருக்கும்' என்று அடிக்கடி நிரஞ்சனா சொல்லும் நீல்கிரிசிற்கு சென்றான். புளி, தக்காளி, வெங்காயம், பூண்டு, மல்லி விதை என்று அனைத்தையும் ஆர்கானிக்காக வாங்கினான். அவன் தனியாக வந்து கறிகாய் வாங்கி வருடங்கள் ஆகிறது. விலை அவனை மிரட்டியது. மிரட்டலுக்கு அன்று அவன் அஞ்சுவதாய் இல்லை.

-----------

அவன் குர்கானில் தனியே வீடெடுத்த போது  அவன் அம்மா அவனுக்கு எழுதிக்கொடுத்த சமையல் குறிப்பை எதோ ஒரு கம்ப்யூட்டர் தலையணைப் புத்தகத்தின் நடுவிலிருந்து எடுத்தான். ஐந்தாம் பக்கத்தில் பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்தது -

############ ரவியின் பாட்டி ரெசிபி தெரிந்தவர்கள் இதை படிக்கத்தேவை இல்லை. தாவுக. ############



வெண்டைக்காய் புளிக்குழம்பு
============================
1. புளியை வெந்நீரில் ஊரவைத்து கரைத்துக்கொள்ளவும். அதில் மஞ்சள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக்கொள்ளவும் .
2. வெண்டைக்காய் சிறிது சிறிதாக வெட்டி வதக்கவும்.
3. சின்ன வெங்காயம் + தக்காளியை வதக்கி தனியே வைத்துக்கொள்ளவும். சூடு தணிந்ததும் அரைத்துக்கொள்ளவும்.
4. கடுகு, கரிவேப்பிலை மற்றும் பூண்டை லேசாக வதக்கி, அதன் மேல் வதக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும்.
5. மேலும் கொஞ்சம் வதங்கியவுடன், புளி கரைசலை சேர்த்து கொஞ்சம் கொதிக்கவிடவும்.
6. அரைத்து வைத்த வெங்காயம் + தக்காளி மிக்ஸ்சை தலையில் தட்டி, போதிய அளவு மஞ்சள், காரப்போடியோடு, சாம்பார் அல்லது குழம்பு மிக்ஸ் சேர்க்கவும்.
7. 3 நிமிடம் கொதிக்கவிட்டு, போதிய அளவு உப்பு சேர்க்கவும்.

#########################################################################################################

கரைத்தான், வதக்கினான், நுகர்ந்தான், கொதிக்கவிட்டான், உப்பு சேர்த்தான், மீண்டும் நுகர்ந்தான், சுவை பார்த்தான், மெய் சிலிர்த்தான்.

இதோடு சேர்த்து உருளைகிழங்கு ப்ரை செய்து முடித்தான்.

---

மணி 3:30 ஆகி இருந்தது. நிரஞ்சனா வருவதற்கு எப்படியும் 7 மணியாவதாகும். அதற்குள் அருகில் இருந்த ஹோண்டா டீலரிடம் சென்று சமீப மாடல்கள் பற்றி கேட்டு வந்தான். 125 cc நிரஞ்சனாவிர்க்கு கொஞ்சம் அதிகம்தான். Test Drive போக வேண்டும் என்று தீர்மானித்தான். Airtel ஆபீசிற்கு சென்று போன மாத பைன் பற்றி விசாரித்தான். Reimburse செய்தார்கள். வீட்டிற்கு வந்து கொடைக்கானல் அஸ்டோரியா ஹோடேலில் ஹோட்டல் புக் செய்தான். காலிங் பெல் அடித்தது. மணி 7:40.

"என்ன சார்.. சீக்கிரம் வந்துட்டிங்க போல..!"

"எஜமானியம்மா நேத்து சொன்ன வேலை எல்லாம் செஞ்சுட்டேன்."

"என்னல்லாம் பன்னிங்க சார்?"

"ஹோண்டா டீலர்கிட்ட பேசினேன்.."

"ம்ம்..", வாட்ச்சை டிவி மேல் வைத்தாள்..

"கொடைக்கானல்ல ரூம் போட்டாச்சு.."

"அட!", ஹாண்ட் பேக்கை சோபா மீது அக்கறையின்றி வைத்தாள்.

"கிரெடிட் கார்டு பில்?"

"போன் கம்பெனிகிட்ட பேசிட்டேன்.. "

"கிரெடிட் கார்டு?"

"அது..வந்து.. சொல்லவே இல்லையே!.. நாளைக்கு..அதெல்லாம் இருக்கட்டும். ப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம்."

"இவ்ளோ சீக்கிரமாவா?"

"வா.. வா.. ஒரு மேட்டர் இருக்கு!"

சிரித்துக்கொண்டே குளிக்கச்சென்றாள். அவள் ஆடை மாற்றி வருவதற்குள், இவன் தயாரித்த குழம்பு, கிழங்கு, சாதம் அனைத்தயும் மைக்ரோ வேவில் சுட வைத்து உணவு மேஜை மேல் அடுக்கினான். நிருவிர்க்குப்பிடித்த வடுமாங்காவை மறக்காமல் எடுத்து வைத்தான்.

குளித்து வந்தவளின் நாசியில் புளியை குழைத்த மனம்.. பொடியை வறுத்த மனம்.. வெண்டைக்காய் வதக்கும் மனம். கண்கள் விரிய கேட்டாள் -

"ஆஹா! என்னடா சமைச்ச? மனம் தூக்குது!"

"ஹாஹாஹா! என் பாட்டியின் புளிக்குழம்பு ரெசிபி! சுட சுட எடுத்து வெச்சுருக்கேன். சாப்பிடலாம் வா!"

"துறை இததான் பண்ணிட்டு இருந்திங்களா?"

"ய்ய்யா!"

"மணி எட்டரை கூட ஆகல. அதுக்குள்ளே நீ எப்படி சாப்பிடலாம்னு சொல்ற?"

"ரொம்ப நேரம் waiting. பொறுமை இல்லை!"

"சரி சரி.. இரு தண்ணி எடுத்துட்டு வரேன். சாப்பிடலாம். லேப்டாப்ல ஏதாவது போடு. புதுசா.. நீ ரொம்ப நாள் ஆச்சு சமைச்சு.", என்று கூறிக்கொண்டே அடுமனை சென்று தண்ணீர், உப்பு எடுத்து வந்தாள்.

"ஹலோ! உப்புலாம் கரெக்டா இருக்கு!"

"சும்மா எடுத்துட்டு வந்தேன்டா!.. வா சாப்பிடலாம்."

லேப்டாப்பில் ஓடிய சூப்பர் சிங்கரை அவ்வளவாக கவனிக்கவில்லை.

ஆவி பறக்க சாதம் போட்டு, குழம்பை ஊற்றிப் பிசைந்து, நல்லெண்ணெய் கிளறி, உருளைக்கிழங்கை சேர்த்து வாயில் போட்டான்.

"ம்ம்ம்ம்.. சூப்பர் டா!" என்றாள்.

ரவி மெல்லிதாய் சிரித்து ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.

மேலும் இரண்டுவாய் சாப்பிட்டுவிட்டு, "டேய் நீ சமைச்சதுலேயே இதுதான் பெஸ்ட்", என்றாள். அமர்ந்துகொண்டே மெலிதாக ஆடினாள். உதட்டோடு சேர்ந்து கண்களும் புன்னகைத்தது.

இவன் ஒன்றும் சொல்லாமல் மேலே சாப்பிட ஆரம்பித்தான்.

"என்னடா ஒன்னுமே சொல்ல மாட்டேங்கற?"

"ம்ம்ம்..."

"ம்ம்ம்.. ன்னா?"

"ஒன்னும் இல்லை.."

"சொல்லுடா", என்று சாபிட்டுக்கொண்டே மூன்று விரல்கள் நீட்டி 'சூப்பர்' என்று சைகித்தாள்.

"சுமாராதான் இருக்கு.. அவ்வளவு நல்லால்லாம் இல்லை."

"அடேய்! நிஜமா சொல்றேன். ரொம்ப நல்லா இருக்கு. காரம், உப்பு, புளி எல்லாமே perfect!"

"நீ சொல்ற.. but நீ என்னோட பாட்டி வெச்ச புளிக்குழம்பு சாப்பிட்டது இல்லை. So உனக்கு தெரிய வாய்ப்பு இல்லை..This has no consistency!"

வேகமாய் சவைத்த வாய்.. slow-mo ஆனது. சட்டென்று சுதாரித்து மீண்டும்

"டேய் விடுடா.. டேக் மை போன்.. Instagram ல போட போறேன்!"

"ப்ச்ச்.."

"சீர் அப் டா.. திஸ் இஸ் அமேசிங்!"

"ம்ம்ம்.."

"அதே டேஸ்ட் வருமா என்ன?"

"அதான் ஏன்?"

"டேய் நீ படிச்சவன்தான?.. இப்போ எவ்வளவோ மாறி இருக்கு.. Fertilizers, pollution, GMO, ஏன் - மண்ணு கூட வேற இப்போ. உன் பாட்டி காலத்துல எல்லாமே ப்ரெஷ். இப்போ ஸ்டோர் பண்ணி விக்கறான். Frozen food வந்தாச்சு. இப்போ இவ்ளோ நல்லா வந்ததே பெரிசு.. புரிஞ்சுக்கோ.."

"இல்ல.."



"ரவி.. easy! இட் ஹாப்பன்ஸ். Change is inevitable.  நீதானே சொல்லிகிட்டே இருப்ப? அப்பறம் என்ன? ஒரு போட்டோ எடு. இன்ஸ்டாகிராம்ல போட்டே ஆகணும். மினிமம் 100 லைக்ஸ்! ஐயம் ஸோ ஹாப்பி!"

யோசித்து புன்னகைத்தான். நிரு, ஆனந்தமாக போஸ் குடுக்கத் துவங்கினாள் 

சாப்பிட்டவாறு. கண்கள் மூடி புளிப்பை ரசித்தபடி.  கண்கள் விரிய ஒரு தம்ஸ் அப். நாவை வைத்து உதட்டை சுவைத்தபடி. கிளிக். கிளிக். கிளிக். கிளிக்.

"தமஸ் அப் நல்லா இருக்குல்ல? ஓகே ஐ வில் போஸ்ட் இட்!"
எல்லாம் மாறத்தான் செய்கிறது..பாட்டிகள் வைக்கும் புளிக்குழம்பைத் தவிர எல்லாம் மாறத்தான் செய்கிறது..

                                                              ---------- * -----------

Saturday, May 2, 2015

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 23





'ஆவின்' பால் கிடைப்பதால்தான் 
அன்பு செலுத்துகிறோமோ 
ஆவின் பால்?

[கமல் படம் பார்த்துவிட்டு வாலி ஸ்டைலில் கவிதை..]

உத்தம வில்லன் - விமர்சனம் | Uthama Villain | Uttama Villain Movie review.

(... pssst - created a Meme for the first time for a movie review! Meme at the end of the post.)

நான் மிகத்தீவிரமான கமல் ரசிகன். விஸ்வரூபம் விவகாரத்தில் கமலுக்கு காசோலை அனுப்ப எத்தனித்தவர்களில் நானும் ஒருவன். விஸ்வரூபம் படம் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகும் வரை வேறு எந்தப்படத்தையும் திரை அரங்குகளில் பார்க்காமல் ஒரே வாரத்தில் 4 முறை பார்த்தவன். 

... என்னைப்போல் பலர் உள்ளனர்.

சியாட்டிலில் நகரின் ராக்ஸி சினிமாவில் (Roxy Cinema) இன்றிரவு உத்தம வில்லன் படம் பார்த்தேன். ரமேஷ் அரவிந்த் இயக்கம், படம் மொக்கை என்று சில விமர்சனங்கள், தசாவதாரத்தை நினைவூட்டிய முன்னோட்டம் - இவை அனைத்தையும் தாண்டி கமல் மீதிருக்கும் நம்பிக்கையில் படம் பார்க்கச்சென்றேன். 

நான்கு ஆண்டிற்கு ஒருமுறை தன் ரசிகர்களை சோதித்துப் பார்ப்பதில் கமலுக்கு அலாதி பிரியம் போலும். மும்பை எக்ஸ்பிரஸ்சில் ஆரம்பித்த இந்த விஷப்பரீட்சை - மன்மதன் அம்பு, உன்னைப்போல் ஒருவன் என்று நீண்டு - இப்போது உத்தம வில்லனில் உச்சம் தொடுகிறது.

மனோரஞ்சன்ஒரு சூப்பர் ஸ்டார். அவருக்கு வாழ்க்கையில் அதி தீவிரமாக ஒரு பிரச்சனை. தான் முன் செய்த தவறுகளை திருத்திக்கொள்ளவும், நன்றி சொல்லவும், நன்றிக்கடன் செலுத்தவும், மன்னிப்பு கேட்கவும், மன்னி க்கவும் அவகாசம் இல்லாமல் போய்விடும் அவலம். அவற்றை எவ்வாறு சரி செய்கிறார் என்பதே கதை.

கதை சுருங்கக்கேட்க்கையில் நன்றாக இருகிறது. அனால் கமல் இதை விரிவு படுத்தி திரைக்கதையாய் வடித்த விதம் - கல்யாணப் பந்தியில் ஆசையாய் கேசரியை அள்ளி வாயில் வைக்கையில் இனிப்பதற்கு பதிலாக உப்புக்கைத்தால் எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு ஒரு கரண்டி கேசரியை சாப்பிட்டு முடிக்கையில், நம்மை கேட்காமல் மேலும் நான்கைந்து கரண்டி உப்பு கேசரி பரிம்மாரப்பட்டால்? மிகவும் தெரிந்தவரின் கல்யாணம்.. சாப்பிட்டுத்தான் வர வேண்டும். என்ன செய்வீர்கள்? பிதுங்க பிதுங்க முழித்துக்கொண்டு சிரித்துக்கொண்டே சாப்பிட்டு எழுந்து வந்து - கேசரி எப்படி என்று வீட்டார் கேட்க்கையில் - 'முந்திரி சூப்பர்' என்று பதில் அளிப்பது போல் இருக்கிறது.

மனோரஞ்சன் தன குருவிற்கு நன்றிக்கடன் செலுத்த தான் நடிக்க இருக்கும் படத்தை அவரை இயக்க வைக்கிறார். அதுதான் திரைக்கதையில் இன்னொரு கதை. அதில் வரும் கமலின் பெயர் உத்தமன். மனோரஞ்சனின் மனத்தில் எழும் அச்சத்திற்கும் கேள்விகளுக்கும், உத்தமன் பதில் கூறுகிரார்ப்போல் திரைக்கதை. உத்தமனின் கதை காமெடிக்கதை. மனோரஞ்சனின் கதை tragedy கதை. இதில் உத்தமனின் காமெடிக்கு நாம் சிரிக்கவுமில்லை, மனோரஞ்சனின் சோகத்திற்கு அழவும் இல்லை. 


உத்தமனின் கதையில் - தெய்யம் நடனங்கள், பூஜா குமாரின் நடனம், ஞானசம்பந்தரின் "என்ன இருந்தாலும் இடது காது போல வருமா?" என்ற வசனம் - இவைதான் கேசரியின் முந்திரிகள். மற்றனைத்தும் உப்புதான்! 

கமலிடம் அவர் ரசிகர் பட்டாளம் தாழ்மையோடு கேட்டுக்கொள்வது - தயவு செய்து நகைச்சுவை எழுதாதீர்கள். மிகவும் மோசமான வசன நகைச்சுவை. இதில் slapstick வேறு முயன்றிருக்கிறார் கமல். கமலுக்கு வராத நடிப்பென்று ஒன்று இருப்பின் அது இதுவாகத்தான் இருக்கும்... 

மனோரஞ்சன் கதையில்  - ஊர்வசி அவரது மனைவி. அண்ட்ரியா - செட் அப். ஆங்கிலம் பேசும் பையன் (பைய்யனுக்கு அழ வரவில்லை என்று நினைக்கிறேன். ஒரு காட்சியில் முகத்தை மூடிக்கொண்டே அழ வைத்திருக்கிறார்கள்). ஊர்வசிக்கு முன்னால் இருந்த காதலிக்கு ஒரு பெண் குழந்தை ('பூ' பார்வதி), அவரின் வளர்ப்பு தந்தை ஜெயராம் - தெலுகு பேசும் மாமனார் (கே விஸ்வநாத்) மாமியார், கூடவே எம்.எஸ். பாஸ்கர். [அந்த முன்னாள் காதலியின் பெயர் யாமினி. இந்த பெயரை வைத்துக்கொண்டு யாம் இனி, யாமினி என்று வார்த்தை விளையாட்டு வேறு! ஐய்யோடா சாமி! - if I split this word into parts like Kamal - Ai! Yoda Saami! - If Star wars were dubbed in Tamil.. you get the point. கடுப்பாகுதுல்ல? லைக் லைக். சேம் சேம்.]

இவர்கள் அனைவரோடும் ஆளுக்கு ஒரு எமோஷனல் காட்சி இருக்கிறது. இவை எதுவுமே ஒட்டவில்லை. ஊர்வசியோடு மருத்துவமனையில் வரும் காட்சி பாஸ் மார்க். மற்ற அனைத்திலும் பொதுவாக ஈரம் இல்லை. 'க்ரேவ் டேஞ்சரில்' இருக்கும் மனோரஞ்சனின் மேல் நமக்கு அனுதாபம் வர வேண்டாமோ? சுத்தமாக வரவில்லை. "அன்பே சிவத்தின்" நல்லாவின் மேல் எவ்வளவு அபிமானம்/அனுதாபம் வந்தது? ஒரு வேளை அது மதனின் எழுத்தாலா? இருக்காலம்!

மீண்டும் கூறியாக வேண்டும் - படத்தின் பெரிய மைனஸ் - கமலின் எழுத்தும், திரைக்கதையும். படத்தில் ஒரு காட்சியில் மனோரஞ்சன் நடித்த ஒரு காட்சியை திரையில் ரஷ் பார்ப்பார்கள்.அப்போது மனோரஞ்சன் தூங்கிவிடுவார். எனக்கென்னவோ நிஜமாகவே கமல் தூங்கியிருப்பார் என்று தோன்றுகிறது. அவ்வளவு போர்!! 

வாழ்கை நிரந்தரமில்லை என்று படத்தில் கருத்து சொல்லும் கமலுக்கு -  தனது எழுத்துக் கூர்மை கூட நிரந்தரமில்லை என்று  யார் கூறுவார்??

இசை, ஒளிப்பதிவு நன்று. கமல் படத்தில் கிரீன் மேட் பிரயோகம் அப்பட்டமாக தெரிவது புதிதில்லை. இதுலும் சப்-ஸ்டாண்டர்ட் VFX. 

பாலச்சந்தரை கடைசியாக திரையில் பார்த்தது மட்டுமே மனதில் நிற்கிறது.

உத்தம வில்லன் - உத்தமனும் இல்லை. வில்லனும் இல்லை. அட! ஒரு எழவும் இல்லை! 

Created a Meme for Uththama Villain as part of the review! 


Monday, April 20, 2015

ஓகே கண்மணி - சப்பை மேட்டருக்கு சண்டை | OK Kanmani - Movie review

வெகு நாட்கள் ஆகிவிட்டது நன் blog எழுதி. வணக்கம் மக்களே... ஓகே கண்மணியோடு மீண்டும் riddikilus..

இந்நேரம் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். கதை - இல்லை என்பதே உண்மை. இருவர் பார்த்தவுடன் பழகுகிறார்கள்; மேலும் பழகுகிறார்கள், கல்யாணம் செய்து கொள்கிறார்கள். சுபம். 


படம் பார்த்தவுடன் 'அலைபாயுதே' மாதிரியான கிளர்ச்சி ஏதும் உண்டாக வில்லை. காதலில் ஆழமோ, பதபதைப்போ, ரகசியமோ, கண்ணாமூச்சியோ, சேர்வார்களா மாட்டார்களா போன்ற tension-ஓ  இல்லை. அதனாலேயே படம் அவ்வளவாக ஒட்டவில்லை. அனைவரும் கர்நாடிக் பாடுகிறார்கள், கேம் டெவலப்புகிரார்கள், பாடாவதி லாட்ஜு கூட அழகாய் இருக்கிறது, திரையில் வரும் அனைவரும் அம்சமாக இருக்கிறார்கள் - யாருக்கும் வேர்க்கக்கூட இல்லை - பிரகாஷ் ராஜ் தவிர; அனைவரும் நல்லவர்களாக, சிரித்துக்கொண்டே, சந்தோஷமாகஇருக்கும் - unidimensional கதாப்பாத்திரங்கள். ஓரளவிற்கு மேல் அலுப்பூட்டுகிறது. 

இரண்டாம் பாதியில் 'இனி 10 நாள் நாம சந்தோஷமா இருப்போம்' என்று சபதம் எடுக்கிறார்கள் ஹீரோ-வும் ஹீரோயின்னும். டிஸ்கோ போகிறார்கள், ஷாப்பிங் போகிறார்கள், பீச்சில் ரொம்பவும் கத்தி பேசுகிறார்கள்.. முடிவில் "இன்னும் 8 நாள் இருக்கு" என்கிறார்கள் - மேலும் கத்தி கத்தி நிறைய செய்கிறார்கள். "இன்னும் 6 நாள் இருக்கு" என்கிறார்கள். அலுப்பூட்டும் திரைக்கதை. வசனங்கள் பயங்கர மோசம். சுஜாதா விட்டுச்சென்ற இடத்தை இன்னும் தமிழ் திரை உலகம் ஏக்கத்துடன் பார்த்துக்கோடு மட்டும் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் - படத்தை மொக்கை என்று ஒதுக்க முடியவில்லை. 

காரணம் ஒன்று:  

ரஹ்மான் / பி.சி. ஸ்ரீராம். உணர்வுப்பூர்வமான இசை, இதமான ஒளிப்பதிவு (Photography கொஞ்சம் படித்ததால் PCயின் ஒளிப்பதிவில், GND filter பயன்படுத்துவது தெரிந்தது. இதையே மற்றவர்களும் பின்பற்றலாம். ஏன் பற்றவில்லை என்று தெரியவில்லை. தவறாய் இருந்தால் மன்னிக்க). 

இது மட்டும் அல்ல, மணிரத்தினத்தின் அனைத்துப்படங்களுமே ஒளிப்பதிவின் உச்சங்கள். படங்களின்படிமங்கள் நம்முள் பதிந்துவிடும் தன்மை உடையவை. வண்ணங்களும் composition-களும் தரம் வாய்ந்தவை. நீங்கள் மௌன ராகம் நாட்களில் இருந்தே இதை கவனிக்க முடியும். ரேவதியின் விரக்தியான பார்வை, நாயகன் வேலுநாயக்கர் காட்சிகள், அஞ்சலி பாப்பா சுவற்றில் கை ஊன்றி வரும் காட்சி, தளபதி ரஜினி pose - இன்றும் பல இடங்களில் பார்க்க முடியும், ரோஜா திருநெல்வேலி, பம்பாய் - மீண்டும் திருநெல்வேலி, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் - உதாரணங்கள் ஏராளம். இந்தப்படத்திலும் அப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் நிறைய.ஒட்டிக்கொள்ளும் வண்ணங்கள். தங்கிவிடும் அழகு. அதனாலேயே படமே நம்முள் பாதிப்பு ஏற்படுதியதாய் உணர்வதை தவிர்க்க முடியாது.அனைத்தும் மாயம்.

காரணம் இரண்டு:

படத்தில் 'tension' இல்லை என்று கூறியிருந்தேன். கொஞ்சம் நிதானமாக யோசிக்கையில், இன்றைய அதி மேல்தட்டு காதல்கள் இவ்வாரே உள்ளது என்று தோன்றுகிறது. பெற்றவர்களின் அனுமதிக்காக பயம் இல்லை. 'Independent' என்கிறார்கள். காதலில் விழுவதே 'depend' ஆவதற்கு என்று உணர மறுக்கிறார்கள். பிரிந்தும் செல்கிறார்கள். அதில் ஏற்ப்படும் உளவியல்சேதங்களை தெரிந்தோ தெரியாமலோ ஏற்கிறார்கள். அவர்களின் அதிகபட்ச பிரச்சனை 'இன்னைக்கு என் friend முன்னாடி என்னை கிண்டல் பண்ணிட்ட. பேச மாட்டேன்' என்றோ 'ஏன் இன்னைக்கு chocolate வாங்கி தரலை' என்றோ அன்றே ஆரம்பித்து அப்போதே முடிந்துவிடும் சில்லறை கோபங்கள். 

அன்றைய 'லெட்டெர்' தவிப்போ, நேற்றைய SMS எதிர்பார்ப்போ இன்றைய காதலில் இல்லை. அனைவரும் அனைவரோடும் எப்போதும்  தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களின் நிஜக்காதல்களே பக்கோடா சாப்பிடுவதுபோல் சுலபமாக இருப்பதால் திரையிலும் அவ்வாறே இருப்பது ஆச்சர்யம் இல்லை.

சின்ன விஷயங்களில் சுவாரஸ்யம் இல்லாமல் போனதால் பெரிய விஷயங்களில் சுவாரஸ்யப்படுத்திக்கொள்கிரார்கள். பெரும்பாலும் அவை விபரீதமாகவே முடிகிறது. உம்: 'ஆதலால் காதல் செய்வீர்'. 

காரணம் மூன்று:

இறுதியாக - துல்கர் சல்மான் தன் வாயில் இருக்கும் ஹேங்கரை கழட்டி வைத்துவிட்டு கொஞ்சம்இயல்பாக நடித்தால் தேவலை. அடுத்த 'மேடி' என்று கூறுவதெல்லாம் டூ மச். நித்யா மேனன் மிக மிக அருமை. இருவரும் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள். 

ஓகே கண்மணி - மேட்டரை சப்பை ஆக்கிவிட்டு, சப்பை மேட்டருக்கு சண்டை போடுகிறார்கள். இந்தபடத்தை பாத்துட்டு நான் பறந்தேன், மெதந்தேன்னு சொல்றதெல்லாம் சுஜாதா சொல்றது மாதிரி 'சும்மா உள்ளுள்ளாய்'

Wednesday, February 4, 2015

Some really smaaal stories IV

இதற்க்கு முன் - சிறிய சிறு கதை தொகுப்பு 

சிறிய சிறு கதைகள்  IV 
=======================

இம்முறை தமிழில்..

உறக்கம் 
----------------



இப்போதெல்லாம் நான் தூங்குவதே இல்லை. ஆனால் தின்னும் கண் விழிக்கிறேன்.

பிம்பம் 
------------
கண்ணாடியில், என் பிம்பம் கண் சிமிட்டியத்தைப் பார்த்தேன்!!

செல்ஃபி 
---------------
ஒரு நாள் நான் உறங்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று எனது அலைபேசியில் இருந்தது. நான் என் வீட்டில் தனியாக வசிக்கிறேன்.

தொடரும்...